சினிமா கனவுடன் வரும் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : தேசிய விருது வென்ற நடன இயக்குநர் கைது

0
135

பிரபல நடன இயக்குனர் ஜானி அவர்கள் பாலியல் பலாத்காரம் வழக்கில் கோவா-வில் வைத்து ஹைதராபாத் காவல் 

துறையினர் கைது செய்துள்ளனர்.

பல சினிமா பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சில துணை நடிகைகளை, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், நடன இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பிரபல நடிகர்களும் ஏற்கனவே சிக்கி உள்ளன. இதில், மலையாளத் திரையுலகம், தெலுங்கு திரையுலகம், தமிழ் திரையுலகம் என்று எதுவும் விதிவிலக்கு இல்லை

இந்நிலையில், 21 வயது இளம் பெண் ஒருவர், தான் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரிடம் உதவியாளராக உள்ளதாகவும், என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாவும் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற “பறக்க பறக்க துடிக்குதே” என்ற பாடலுக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

அதன்படி விசாரணை நடத்திய ஹைதராபாத் காவல்துறையினர் பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  ஜானி  மாஸ்டர் தலைவரானார்.  இந்நிலையில், கோவாவில் பதுங்கி இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர்.

சினிமா கனவுகளோடு வரும் பல இளம் பெண்களை, திரைப் பிரபலங்கள் பாலியல் ரீதியாக அத்துமீறிவது தொடர்கதையாகி வருகிறது. இதில் பலரும் சிக்குவார்கள் என்றும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here