Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

இனி சினிமா டிக்கெட் விலை ரூ.250  : தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரிய…

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisements
  1. பெரிய நடிகர்களின் படத்தை 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படத்தை 6 வாரங்கள் கழித்தும் ஓ.டி.டி.-யில் திரையிடுமாறு தயாரிப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
  1. தமிழ் திரைப்படங்கள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும் என்றும்  திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
  1. ஏ.சி. திரையரங்குகளில் 200 ரூபாயும், ஏசி அல்லாத திரையரங்குகளில் 150 ரூபாய் வரையும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
  1. தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்றும், இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தியேட்டர்களில் டீ, காபி, பாப் கார்ன், பப்ஸ் என அனைத்து திண்பண்டங்களின் விலை பல உயர்வு. இதில் டிக்கெட் விலை உயர்த்தினால், தியேட்டர்களில் வரும் ரசிகர்களின் கூட்டம் குறையும் என தமிழ் சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here