சூப்பர் பைக், ட்ரிப், அதிரடி சாகசங்கள், பிரச்சனைகள், சர்ச்சைகள், போலீஸ் கேஸ் என்று சொன்ன உடன் உங்களுக்கு யார் ஞாபகத்திற்கு வருகிறார் அவர்தான், அவரே தான்… டி.டி.எஃப். வாசன் தான்.
காவல்துறை அதிகாரியின் மகனான வாசன் படித்து முடித்தவுடன் விலை உயர்ந்த சூப்பர் பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு ஊராக செல்வதை வழக்கமான கொண்டுள்ளார். அதனை வீடியோவாகவும் எடுத்து தனது “டி.டி.எஃப்” யூடியூப் சேனலில் பதிவிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபட்டு வரும் வாசன் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் அதிகளவில் தனது ரசிகர்களை கூடி நிகழ்ச்சி நடத்தியது. அதற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், 2 ,3 முறை வாசன் சிறைக்கும் சென்று வந்துள்ளார்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே விபத்து ஒன்றில் சிக்கிய வாசன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாசனின் ஓட்டுநர் உரிமைத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, டிடிஎஃப் வாசனை அவரது ரசிகர்களையும் தாண்டி ஒருவர் கொண்டாடினார் என்றால், அது “மஞ்சள் வீரன்” பட இயக்குநர் செல்அம்தான். ஆனால் அந்த இயக்குநரே, தன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
டிடிஎஃப் வாசன், இயக்குநர் செல்அம் இணைந்தற்கு ஒரு பக்கம் ட்ரால்கள் என்றால், மறுபக்கம் வாசனை ஹீரோவாக பார்ப்பதில் அவரது ரசிகர்களான 2கே கிட்ஸ்களுக்கு இருந்த ஆவல் சொல்லி மாளாது. இந்நிலையில்தான், அதிர்ச்சிகரமான செய்தியாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் செல்அம். இதில் என்ன ட்விஸ்ட் என்றால் இதை வாசனிடமே அவர் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
“மஞ்சள் வீரன்” படத்தின் புதிய ஹீரோ யார் என்பது வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here