விஜய் மாநாட்டில் அடுத்தடுத்தும் மயங்கி விழுந்த தொண்டர்கள் : கண்டுகொள்ளாத நிர்வாகம்

0
112

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இதனால் மாநாட்டு திடலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ள வி.சாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் வசதி, கழிவறை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் அங்கு செய்யவில்லை. குடிநீரும் உணவும் அங்கு முறையாக வழங்கப்படாத காரணத்தால் பல தொண்டர்கள் பசியால் அங்கு மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை சக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியால் மாநாட்டிற்கு வந்த பல தொண்டர்களும் மாநாட்டில் சிக்கி உள்ளனர். வெயிலின் தாக்கத்தாலும் பலரும் சோர்வடைந்து மயங்கி விழுந்துள்ளனர்.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் நடிகர் விஜய் அவர்களின் காதுக்கு சென்றுள்ளது. அவரும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து அழைத்து திட்டியதாக சொல்லப்படுகிறது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here