தமிழ்மொழி பற்றி புதுசா கவலைப்படும் இயக்குநர் பேரரசு : பாஜக அதிர்ச்சி

0
71

தெய்வத்திருமகள்’, ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநரான ஏ.எல். விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை தொடங்கியுள்ளார். நடிகர் சிவகுமார், இயக்குநர் பிரியதர்ஷன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் ஸ்டூடியோவை திறந்து வைத்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் , இயக்குனர்கள் பாலா, சுரேஷ் கிருஷ்ணா, சுசீந்திரன், பேரரசு,மோகன் ராஜா, த செ ஞானவேல், ஆர் கே செல்வமணி, நடிகர் எம் எஸ் பாஸ்கர், சிவகுமார், கெளதம் கார்த்திக், தம்பி ராமையா, மஞ்சுமா மோகன், சரண்யா பொன்வண்ணன், எடிட்டர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் பேரரசு, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக வேண்டும். இந்தி படிக்கட்டும். படிக்காமல் போகட்டும் அது அவர் அவர்களுடைய விருப்பம்.

இன்றைக்கு 40 சதவீதம் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் பேசுகிறார்களே தவிர எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுகிறார்கள் ஆனால் ஏற்கனவே தமிழ் அழிந்து கொண்டுதான் வருகிறது. தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் விருப்ப மொழிகள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற வேற்று மொழிகள் இருக்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்ப மொழியாக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

சினிமாவில் வெற்றி பெறுவதற்கு இந்தி மொழி தேவை இல்லை எனவும் இந்தி மொழியில் படங்களை இயக்குவதற்கும் நடிப்பதற்கோ, இல்லை பணியாற்றுவதற்கோ இந்தி மொழி அவசியம் இல்லை என்றும் பேரரசு கூறியுள்ளார். பாஜக ஆதரவாளரான இயக்குநர் பேரரசு அவர்கள் ஹிந்தி மொழி குறித்து இப்படி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here