தங்கம் கடத்தி மாட்டிக்கிட்ட நடிகை : எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறும் தந்தையான போலீஸ் அதிகாரி
கன்னட நடிகை ரன்யா ராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) 14 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
6 முதல் 7 மாதங்களாக அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்ததாகவும், துபாய்க்கு 10க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரன்யாவிற்கு துபாயில் எந்த தொழில் அல்லது குடும்ப தொடர்புகளும் இல்லாததால் சந்தேகம் எழுந்துள்ளது.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அவரை கண்காணித்து வந்த நிலையில், கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளுடன் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
g


ரன்யாவின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான கே. ராமச்சந்திர ராவ் மகள் குறித்து கூறுகையில், ரன்யா 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தங்களை சந்திக்கவில்லை என்றும், அவரது கணவர் அல்லது அவரது தொழில் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் பணிசெய்யும் காலத்தில் எந்தவித கருப்பு புள்ளியும் என் மீது இல்லை என்றும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் நடிகையின் தந்தை திட்டவட்டமாக கூறிவிட்டார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here