“ஆருயிர் நண்பா்….” தயாரிப்பாளர் ராவுத்தர்க்கு நடிகர் விஜயகாந்த் எழுதிய கடிதம் : சொன்னது என்ன?

0
83

தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார்.

அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சுவாரசியமான தகவல்களை இங்கு பார்க்கலாம்!..

அக்கடித்ததில் “நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன்.

அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று எழுதியிருந்தார் நடிகர் விஜயகாந்த்….!

நடிகர் விஜயகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ராவுத்தர் இடையேயான நட்பை தமிழ் திரையுலகினர் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இருப்பினும் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு சென்ற பிறகு இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தையும்; பழக்கமும் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here