பிக்-பாஸ் வீட்டில் மீண்டும் கலவரம் : இன்று வெளியே தூக்கி வீசப்படும் தயாரிப்பாளர்

0
164

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் சண்டைகள் வெடித்து வருகிறது. இருப்பினும் மற்ற பிக் பாஸ் சீசனை ஒப்பிட்டு பார்க்கும்போது இது குறைவுதான்.

இருப்பினும் இந்த பிக் பாஸ் சீசனில் ஆண்களை விட பெண்கள் அணியில் பல்வேறு சண்டைகள் சச்சரவுகள் வெடித்து வருகிறது. விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், விஜய் டி.வி சீரியல் நடிகை பவித்ரா, நடிகை சௌந்தர்யா, தர்ஷா குப்தா இவர்களுக்குள் நடக்கும் சண்டை உச்சத்தை எட்டி உள்ளது.

மற்றொரு பக்கம் இந்த பிக் பாஸ் சீசன் அதிக சம்பளம் வாங்குபவரும், தயாரிப்பாளருமான ரவீந்திரன் அவர்களுக்கும், அவருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஞ்சித் அவர்களுக்கும் இடையே நாள்தோறும் மோதல் வெடித்து வருகிறது. சக போட்டியாளர்கள் தான் இருவரையும் சமாதானப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் உட்கார வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரு ஆள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே போகப் போகிறார்.

பிக்-பாஸில் 18 போட்டியாளர்களில் லிஸ்டில் 6 பேர் இருக்கிறார்கள். ஜாக்குலின், சௌந்தர்யா, அருண் பிரசாத், ரவீந்தர், ரஞ்சித், முத்துக்குமரன் என ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் நாமினேஷன் பிரீ பாஸை (Free pass) அருண் பிரசாத் வென்றதால் அவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிள்ளார். அதுபோல இந்த நாமினேஷனில் கம்மியான ஓட்டு வாங்கிய அவர் இந்த வாரம் தப்பிவிட்டதால் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களில் ஒருவர்தான் எலிமினேட் ஆகி உள்ளார்.

எப்படி இருந்தாலும் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு பிக்-பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here