நான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“சித்திரம் பேசுதடி” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதை தொடர்ந்து அவர் இயக்கிய “அஞ்சாதே” படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய “யுத்தம் செய்; நந்தலாலா” என அடுத்தடுத்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் இயக்கிய “பிசாசு” படம் வெற்றி படமாக அமைந்தது.
மிஷ்கின் ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பாடகர், நடிகர் என சினிமாவில் பலவற்றிலும் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளார்.
“சவரக்கத்தி”; “வணங்கான்” உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் அவர் நடிப்பில் வெளியாக உள்ள “டிராகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
‘பேட் கேர்ள்’ பட சர்ச்சை குறித்தும் மிஷ்கின் பேசினார். அவர் பேசியதாவது, ‘பேட் கேர்ள்’ படம் எடுத்தது ஒரு பெண். டிரைலரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.
பின்னர் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர்.
அது குறித்து கருத்து தெரிவித்த அவர், “விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here