தனது பேட்டியை சில ஊடகங்கள் எதிர்மறையாக பயன்படுத்தியதால் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் அஜித் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடிக்கப் பட்டவர் அஜித். தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், துப்பாக்கிச்சூடு, நீண்ட தூர பைக் பயணம் போன்ற பலவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி எப்போதும் பிசியாக இருந்து வரும் நடிகர் அஜித் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறிய சில கருத்துக்கள் சில ஊடகங்களால் எதிர்மறையாக மாரி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது இதுகுறித்து நடிகர் அஜித் உணர்ச்சிவசத்துடன் கொடுத்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆங்கில ஊடகத்திற்கு நான் அளித்த பேட்டி இளைஞர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்காமல் ஒரு சிலரால் எதிர்மறையாக மாறியது. நான் எப்போதும் விஜய்க்கு நன்மையே நினைக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். நான் பேசியதை அவருக்கு எதிராக திரிப்பவர்கள் அமைதியாக இருக்கவும். ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள் அரசியல் பத்திரிக்கையாளர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள் என தனித்தனியாக இருந்தார்கள் ஆனால் இப்போது அரசியல் பத்திரிக்கையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிக்கையாளர்களே அரசியல் மயமாகி வருகின்றனர். நாம் இப்பொழுது நஞ்சு கலந்த சமூதாயமாக மாறிவிட்டோம். என்னுடைய நல்ல கருத்துக்கள் சில ஊடகங்களால் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. அதற்கு மாறாக இதனை அஜித்திற்கும், விஜய்க்கும் மோதல் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பதுபோல் ஆக்கிவிட்டனர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனது இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி 10, 20 வருடங்கள் கழித்து மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கும். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள் பார்ப்பதற்கு தகுதியானவை என்று நினைத்தால் மட்டும் எனது படத்தை பாருங்கள் என்று எனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன்.
என்னுடைய படத்தை பாருங்கள் என்று நான் யாரையும் கட்டாயமும் படுத்த மாட்டேன் ஓட்டு கேட்டும் யாரிடமும் வரமாட்டேன். ஏனென்றால் எனக்கு அதில் விருப்பமில்லை. என்னை பிடிக்காதவர்கள் என்னை ஒரு வேற்று மொழிக்காரன் என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறார்கள். எனது பூர்வீகத்தை பற்றியும் வீணாக பேசி வருகிறார்கள். எனக்கான ஒரு நாள் வரும் அதே நபர்கள் ஒருமித்த குரலில் என்னை தமிழன் என்று அழைப்பார்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். மேலும் இந்தக் கார் ரேஸில் சாதித்து, இந்த நாட்டிற்கும், இந்த மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புவதாகவும் அதற்காக என் உடலையும், என் முழு ஆன்மாவையும் அர்ப்பணிப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை எனக்கூறி தனது பேட்டியை முடித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


