கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷன் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா பேசியுள்ளார்.
கொலை சம்பவம்
கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நடிகை பவித்ராவுக்கு திருமணம் மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை விமர்சனம் செய்து தர்ஷனின் ரசிகர் மன்ற உறுப்பினர் ரேணுகா சுவாமி என்பவர், பவித்ராவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தர்ஷன் கூலிப்படை வைத்து ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திவ்யா ஸ்பந்தனா
இந்நிலையில் நடிகர் தர்ஷன் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என்ற நடிகை திவ்யா ஸ்பந்தனா பேசியுள்ளார். மேலும், அவருக்கு பெரும் செல்வாக்கு உள்ளதாக வெளியில் காட்டப்படுகிறது.
ஆனால் அவர் அப்படி ஒன்றும் இல்லை. தர்ஷன் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியை தான் அடைந்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை நடிகை திவ்யா ஸ்பந்தனா பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here