பூர்ணிமா பாக்யராஜ்
80களில் பிரபலமாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் பூர்ணிமா பாக்யராஜ்.
இவர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். இவர்கள் கல்யாணம் செய்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தம்பதியர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

எல்லா நடிகைகள் போல கல்யாணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த பூர்ணிமா இப்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிப்பதையும் கடந்து இவர் ஆடை வடிவமைப்பு மற்றும் சொந்தமாக ஜுவல்லரி போன்ற தொழில்களையும் பிஸியாக செய்து வருகிறாராம்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் நடிகை பூர்ணிமா ஒரு பேட்டி ஒன்றில், நான் திருமணத்திற்கு பிறகு என்னுடைய தொழிலில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். எனக்கு சமையல் செய்ய தெரியாது, என்னால் இன்ட்ரஸ்ட் ஆக சமைக்க முடியாமல் ஆகிவிட்டது.
அதேபோல் நான் என்னுடைய உடல் நிலையை சரியாக பராமரிக்காததால் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உடல் எடை கூடி விட்டேன். பிறகு என்னை புரிந்துகொண்டு நடைப்பயிற்சி, யோகா செய்து வருவதால் இப்போது பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சாப்பாட்டில் கவனம் செலுத்தாததால் வந்த வினை உடல் எடை கூடி போனது. அதைப்பார்த்து நானே அதிர்ச்சி அடையும் அளவிற்கு மாறிப் போயிருந்தது.
இதனால் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தாலும் நம்முடைய உடம்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெறிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here