தமிழ் திரையுலகில் விஜய் – அஜித்தை விட 90ஸ் காலகட்டத்தில் உயரத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990ம் வருடம் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், ஆரம்ப காலகட்டங்கள் முதல் அதிக ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய், ஷாலினி, சிம்ரன் மற்றும் ஜோதிகா என டாப் கதாநாயகிகள் ஜோடியாக நடித்து ரொமான்டிக் நாயகனாக வலம் வந்த இவர், திடீரென மார்க்கெட்டை இல்லாமல் ஃபீல்ட் அவுட் ஆனதற்கான அதிர்ச்சியான காரணம் இதுதானாம். அதாவது அவருடைய திருமண வாழ்க்கை தான் காரணம் என கூறப்படுகிறது.

முன்னதாக, காதலை மையமாக வைத்து வெளிவந்த படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜுமேனன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் வருடம் வெளியான இப்படத்தில் மம்முட்டி அஜித் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

படத்தின் கதை நடிகர்களை கடந்து ஏ ஆர் ரகுமானின் இசை பெரிதாக பேசப்பட்டது. இந்த படத்தில், அஜித் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க பிரசாந்த்திடம் தான் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில், ஜீன்ஸ் படம் பெரிதாக பேசப்பட்டது. அதனால், பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் அந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை இணையாக போடுங்கள் என சொன்னாராம். ஆனால், படத்தின் கதைப்படி பிரசாந்துக்கு இணையாக தபுதான் ஐஸ்வர்யா ராய் எல்லாம் முடியாது என இயக்குனர் சொல்லியிருக்கிறார். இதனாலேயே, பிரசாந்த் இந்த படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here