என் நடிப்பைக் கிண்டல் செஞ்சாங்க.. ஆனா இப்போ!” – மாநில விருது மேடையில் கண்கலங்கிய ராஷ்மிகா!
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 'சிறந்த நடிகைக்கான' விருதை…
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘சிறந்த நடிகைக்கான’ விருதை வென்றுள்ளார்.
ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற ‘தெலங்கானா கத்தார் திரைப்பட விருதுகள் 2025’ (Telangana Gaddar Film Awards) விழாவில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்திற்காக விருது இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ (The Girlfriend) திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, ராஷ்மிகாவிற்குச் சிறந்த நடிகைக்கான மாநில விருது வழங்கப்பட்டது. தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் நடிகர் ராம் சரண் ஆகியோர் மேடையில் இந்த விருதையும், 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் ராஷ்மிகாவிற்கு வழங்கிக் கௌரவித்தனர்.
கண்கலங்கிய ராஷ்மிகா விருது பெற்ற பிறகு மேடையில் பேசிய ராஷ்மிகா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் பேசியதாவது:
“ஆரம்ப காலத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து பலரும் ட்ரோல் செய்து கடுமையாகக் கிண்டல் செய்தார்கள். ஆனால், இன்று அதே நடிப்பிற்காக மாநில அரசிடம் இருந்து எனக்கு விருது கிடைத்துள்ளது. நான் வாழ்க்கையில் மிகப்பெரிய தூரத்தைக் கடந்து வந்துவிட்டேன் என உணர்கிறேன். இந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது.”
மாமியாருடன் வந்த ‘தெலங்கானா மருமகள்’ தொடர்ந்து பேசிய அவர், “அன்று நான் ஒரு மகளாக உங்கள் முன் வந்தேன். இன்று ‘தெலங்கானாவின் மருமகளாக’ (Teluginti Kodalu) உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை,” என்றார்.
Advertisements
முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விழாவிற்கு ராஷ்மிகா தனது கணவர் விஜய்யுடன் வராமல், தனது மாமியார் மாதவி தேவரகொண்டாவுடன் வந்திருந்தார். ராஷ்மிகாவின் மேடைப் பேச்சைக் கேட்ட மாமியார் மாதவி, பார்வையாளர் இருக்கையில் அமர்ந்தபடி ஆனந்தக் கண்ணீர் விட்டார். மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மற்ற வெற்றியாளர்கள் யார்? இந்த பிரம்மாண்ட விழாவில் ‘தண்டேல்’ படத்திற்காக நாக சைதன்யா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். மேலும், தெலுங்குத் திரையுலகின் உயரிய விருதான ‘என்.டி.ஆர் தேசிய விருதை’ மெகாஸ்டார் சிரஞ்சீவியும், ‘பைடி ஜெயராஜ்’ விருதை உலகநாயகன் கமல்ஹாசனும் பெற்றனர்
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here