தொடர் வசூல் ஓட்டத்தில் வாழை : இதற்குள் இத்தனை கோடியா?

0
138

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான “வாழை” படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.

“பரியேறு பெருமாள்” என்னும் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பின்னர் தனுஷ் அவர்களை வைத்து இயக்கிய கர்ணன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து, “மாமன்னன்” படமும் நல்ல மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது. 

மாரி செல்வராஜ் ஸ்டைல் :-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் எடுக்கும் படம், அவர் பேசும் அரசியல் தமிழ் சினிமாவில் புதுமையான ஒன்று. தலித் அரசியலை வெளிப்படையாக பேசி சினிமாவில் காட்சிப்படுத்தி வீதம் அனைத்தும், மக்களின் பாராட்டை பெற்றது.

வசூல் சாதனையில் வாழை :-

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் சிறுவயதில் தான் அனுபவித்த வலிகளையும், வேதனைகளையும் அவரின் ஊர் சூழ்நிலையும், அந்த மக்களின் வாழ்வியலையும் மிகவும் எதார்த்தமாக பதிவு செய்த படம் “வாழை”. அந்த படம் வெளியான முதல் பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேல் ஆனா நிலையில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு சில கோடிகளில் எடுத்த படம் 20 கோடியை தான்டி, முதலீடிற்கு மேல் பல கோடி ரூபாய் லாபத்தை வாழைப்பழம் ஈட்டி தந்துள்ளது. வணிக ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற வாழைப்பழம், தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here