நம்ம வாழ்க்கையில நிறைய பேரை நாம்ம தொடர்ந்து சந்திக்குறோம்.
நம்மளோட friends, குடும்பம், colleagues, அப்படினு தொடர்ந்து நாம்ம ஒவ்வொருத்தரோடயும் conversation வச்சுக்குறோம்.தினமும் இவங்களை பார்க்குறோம், பேசுறோம், இன்னும் நெருக்கமா கூட பழகுறோம் இல்லையா?அப்படி நாம்ம பழகுற அனைவரும் ஒரே மாதிரியான knowledge and intelligent ஓட இருக்குறாங்களானு கேட்டா கண்டிப்பா இல்லை. ஒவ்வொருத்தரோட intelligence உம், ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபட்டதா இருக்கு.
அப்போ. நம்மலோட பழகுறவங்களை எப்படி அறிவாளியா? இல்லையானு எப்படி கண்டுபிடிப்பது? நாம்ம ஒரு புத்திசாலியானவங்ககூட பழகுறப்போதான், நம்மளாலயும் ஒழுக்கமா இருக்க முடியும் இல்லையா? நம்மகூட இருக்க ஃபிரண்ட், ஒரு நூலகத்துக்கு சமம்னு அப்துல்கலாம் சொல்றாரு.ஆனா, நாம்ம அப்படி தகுதி ஆனவங்ககூட தான் பழகுறோமானு கேட்டா கண்டிப்பா கிடையாதுன்னு தான் சொல்லியாகனும்.
அந்த விதத்துல, ஒரு அறிவாளியான ஆளுங்ககிட்ட இருக்குற பழக்க வழக்கத்தை தெரிஞ்சுகிட்டா, நாம்ம பழகுறதுக்கு அவங்க தகுதி ஆனவங்கனு அர்த்தம்.
அப்படி புத்திசாலியான மக்களுக்கு மட்டுமே இருக்ககூடிய சில பழக்கங்களை பத்திதான் இப்போ பார்க்க போறோம்.
இந்த கட்டுரையை படிச்சதுக்கு பிறகு..அடடே..! இந்த பழக்கம் அனைத்தும் எனக்கே இருக்கு..நானும் கூட ஒரு புத்திசாலி தான் போலேனு நீங்க சுயபரிசோதனையும் பண்ணிக்கலாம்..

1.Unattainable Goals
பொதுவா, சராசரியா எல்லாரும் போல யோசிக்குறவங்க தனக்குனு ஒரு goal set வச்சிப்பாங்க.குறிப்பா….ஆண்டோட முதல் நாள்ல இருந்து, நான் புத்தகம் வாசிக்க போறேன், diet maintain கடைபிடிக்க போறேனு தனக்குள்ளேயே சொல்லிப்பாங்க.இப்படி ஒரு சாதாரண விதத்துல எல்லாரையும் மாதிரி ஒரு goal set பண்ணிப்பாங்க.அந்த goal அவங்களால அடையுற முடியுற சாதாரண சாதனையா இருந்தாலுமே அதுக்கான கூடுதல் வேலைய ஒரு வாரத்துக்கு மேல போட மாட்டாங்க.
ஆனா, Highly intelligentஆன மக்கள் எல்லாரும் இவங்களுக்கும் மேல ஒரு படி போய், எட்ட முடியாத ஒரு goal ஐ தன்னால சாதிக்க முடியும்னு நம்புவாங்க.அவங்களுக்கு உள்ள அதிகபடியான ஆர்வம்தான், unattainable goals ஐயும் சாதிக்க முடியும்னு நினைக்க வைக்குது.
தெரியாத எத்தனையோ விஷயங்களை, தெரிஞ்சுக்க வாய்ப்புக்களை தேடுவாங்க.சொல்லபோனா, அடைய முடியாத விஷயத்தையும் முடிச்சு காட்டுவேன் அப்படின்ற நம்பிக்கை அவங்களுக்குள்ள இருக்கும்.அவங்ககிட்ட இல்லாத ஒரு விஷயத்தை சாதிக்க அதை chase பண்ணி போறது இந்த மாதிரியான Highly intelligent மக்களுக்கு சாதாரணமான ஒரு விஷயமா இருக்கும்.
இது professionalல மட்டும் இல்ல, அவங்களோட சொந்தமான விஷயங்களை செய்யவும், இந்த மாதிரியான chase decision ஐ கையில எடுத்துப்பாங்க.
நீங்களும் ஒரு ரொம்ப புத்திசாலியான ஆளா இருக்குறீங்க அப்படினா, தெரியாத எத்தனையோ விஷயங்களை தெரிஞ்சுக்க அதிகமான ஆர்வத்தோட இருப்பீங்க.
அதை தெரிஞ்சுக்கநிறைய தேடுவீங்க.ஏற்கனவே தெரிஞ்ச விஷயங்கள் மேல இவங்களுக்கு ஆர்வம் இல்லாததுமே, இப்படி தெரியாத காரியங்களை தேடுறதுக்கு இன்னொரு காரணம் அப்படினு சொல்லலாம்.அப்படி அவங்களுக்கு தெரிஞ்ச விஷயம் ஆரோக்கியம், உறவுமுறை சம்பந்தபட்ட பெரிய விஷயமா இருந்தாலுமே, அதை ignore செஞ்சிடுவாங்க.
இதுல இருந்து நம்மளால guess செய்ய முடியுறது என்ன அப்படினா,இந்த மாதிரியான highly intelligent people அனைவரும், நம்மளை போல இருக்கமா, அவங்ககிட்ட எது இல்லையோ, அதை தெரிஞ்சுக்க மட்டும்தான் ஆர்வமா இருப்பாங்க.
2.Mindless creativity
Highly புத்திசாலி ஆனவங்களை பத்தி நாம்ம ஏற்கனவே நினைச்சு வச்சுருந்த விஷயம்தான் இது.அவங்க நிறைய கற்பனை திறமையோட இருப்பாங்கனு நமக்கு அது நல்லாவே தெரியும்.ஆனா, அப்படிபட்ட கற்பனை திறமையை எப்படி வெளிகாட்டுவாங்கனு உங்களுக்கு தெரியுமா?
அவங்களோட கற்பனை சக்திக்கு காரணமா இருக்குறது, doodleனு சொல்லகூடிய கிறுக்கல்தான்.நானும் நல்லா கிறுக்குவேன், அப்போ நானும் ஒரு புத்திசாலியான ஆளானு நீங்க கேக்குறது எனக்கு தெரியும்.கிறுக்கல்னா, அது வெறும் எந்த வடிவமும் இல்லாத கிறுக்கல குறிக்கல.அவங்களோட எண்ணங்கள் அனைத்துக்கும், ஒரு வடிவம் குடுக்குறாங்க.இது மாதிரி அவங்க வடிவம் குடுக்குறது மூலமா, தன்னோட மனதில் என்னலாம் தோணுதோ அதை வெளிப்படுத்துறாங்க.
அதுல எது செய்முறையா நல்லா ideaவா இருக்கோ, அதை தேர்வு பண்ணி அதுல வேல பண்றதை செய்றாங்க.இப்படி நாம்மளும் நம்மளோட எண்ணங்களில நினைப்பதை doodle பண்றது மூலமா, அதாவது கையால ஒரு விஷயத்தை outline ஆ வரையுறோம் அப்படினா,பல நல்ல ideasஐ நம்மளாலயும் ஏற்படுத்த முடியும்.
நாம்ம அப்படி doodle செய்யல அப்படினா, நம்மளோட மனசு நாம்ம என்ன சிந்திச்சோம்ன்றதை சீக்கிரமா மறந்துரும்.நமக்கு ஒரு நிமிஷத்துல எக்கச்சக்கமான எண்ணங்கள் தோன்றும், அதுல சில எண்ணங்கள் நமக்கு எந்த விதத்துலயும் பயனாகாது, ஆனா சில எண்ணங்கள் நம்மளை வாழ்க்கையில அடுத்த நிலைக்கு கொண்டு போகும்,அப்படி நாம்ம மனசுக்குள்ள வர்ர அனைத்து எண்ணங்களுக்கும் ஒரு உருவம் குடுக்குறப்போ, அதுல எது நேர்மறை அல்லது எது எதிர்மறை அப்படினு அடையாளம் காண முடியும்.
நேர்மறை எண்ணங்கள் வேலை செய்யும்னு நம்பிக்கை இருந்தா, அதுல வேலை செய்ய நேரத்தை ஒதுக்கலாம்.இப்படி, தனக்குள்ள ஏற்படுற எண்ணங்கள் எல்லாத்தயும் Doodleமூலமா process செய்யுறனாலதான் இவங்க அனைவரும் Highly Intelligent மக்களா இருக்காங்க.
3.Stubborn Problems
Highly intelligentஆன மக்களுக்கு அதிகமா ஒரு விஷயத்தை நோக்கி push பண்றோமோ? அப்படின்ற எண்ணமே வராது.தன்னால எந்த பிரச்சனையை சரி செய்ய முடியாதுனு எண்ணுறாங்களோ, அத விட்டுட்டு போகாம,அதை சரிசெய்ய அதிகபடியான நேரத்தையும்,சக்தியையும் செலவிடுவாங்க.இப்படிபட்ட smartஆன ஆளுங்க ஒரு விஷயத்துல தன்னோட நேரம் மற்றும் சக்தியை செலவிடுறாங்க அப்படினா,அதுக்கான தீர்வு கிடைக்குற வரை அந்த விஷயம் எந்த அளவு கஷ்டமா இருந்தாலும் விட்டுட்டு வர மாட்டாங்க.
பல காலா நேரங்களில தங்களால இன்னும் செய்ய முடியும்ன்ற personality traitஐ இது வெளிப்படுத்துதுனு கூறலாம்.இப்படிபட்ட ஒரு personality இருக்கனாலகூட இவங்களால, பலரும் செய்ய முடியாத சாதனையை அடையலாம்.ஆனா, இன்னொரு விதத்துல இது மோசமான lifestyle choicesஐயும் தேர்ந்தெடுக்க செய்யுது.
தன்னையே கெடுக்குற ஒரு பழக்கமாகூட இது மாறுறதுக்கான வாய்ப்பை உண்டாக்குது.சில நேரம் தனக்கு செய்யமுடியாத விஷயங்களை, விடாபிடியா அதை செஞ்சே தீருவேனு நிக்குறது இவங்களுக்கே பிரச்சனையா போய் முடியலாம்.ஒரு விஷயத்தை விட்டுட்டு வரது அப்படின்றது சாதாரணமான ஆளுங்களுக்கு, சாதாரணமான விஷயமா தெரியலாம்.ஆனா, இப்படிபட்ட smartஆன மக்களுக்கு letting go அப்படின்றது முடியாத காரியமா இருக்கு.இப்படி அவங்களால எளிமையா ஒரு செயலை விட முடியாததுகூட பல வெற்றிகளை அவங்க அடைவதற்கு காரணமா இருக்கு.
4.Disorganized routines
ஒரு சுத்தமான Environmentல இருக்குறதும், அங்க உட்கார்ந்து பணி செய்றதும் நம்மளை productiveஆன ஆளா மாத்துது.அப்படி சுத்தமான environment, productive lifestyle ஐ குடுக்குறதா பல ஆதாரம் இருக்கு.ஆனா ஏன் highly intelligent மக்களால தான் சுத்தி இருக்க பகுதிய சுத்தமா வச்சுக்க முடியல? இப்படிபட்ட smartest people பணி செய்ற அலுவலகம், desk, studios அப்படினு அனைத்துமே பல நாள் குப்பைகளோடயும், சுத்தம் இல்லாமையும் இருக்கு.இது கேக்குறதுக்கு ரொம்பவும் வினோதமா இருக்கலாம்.
highly intelligentஆனமக்கள் தன்னோட இடத்தை சுத்தமா வச்சுருப்பாங்கனு நாம்ம இதுவரை நினைச்சுருப்போம்.ஆனா, நம்ம நினைச்சதுபடி அவங்களோட பகுதி ஒரு சாதாரணமான மக்களோட environment ஐ விடயே அதிக குப்பையா இருக்கும். இப்படி அவங்களோட இடத்தை சுத்தமா வச்சிக்காத, இந்த மோசமான பழக்கம் கூட அவங்களோட புத்திக்கு ஒரு காரணமா இருக்கலானு கூறப்படுது.இப்படி குப்பையோட வாழ்வது உங்களை எந்த விதத்துலயும் smarterஆ வைக்காது,ஆனா, நிறைய கற்பனையான எண்ணங்களை உங்களுக்குள்ள உண்டாக்கலாம்.
அறிவாளியான மக்கள் அவங்களோட inspirationஐயும் insightஉம் கண்டுபிடிக்க ஒரு ஒழுங்கே இல்லாத Environment காரணமா இருக்குனு ஒரு studiesல நிரூபனம் பண்ணிருக்காங்க.நிறைய முக்கியமான விஷயங்களை பத்தி மட்டுமே யோசிக்குறனாலயோ என்னவோ,தன் மூளைக்குள்ள சுத்தமான Environment முக்கியம் அப்படினு புத்திசாலியான மக்கள் நினைக்க மாட்றாங்க.அதுக்காக, ஒரு சுத்தமில்லாத பகுதியில இருந்தா, நானும் ஒரு அறிவாளினு நீங்க நினைக்ககூடாது.உங்களோட சோம்பேறித்தனத்தை புத்திசாலித்தனம் அப்படின்ற அர்த்தத்துல நீங்க எடுத்துக்ககூடாது.
அப்படிலாம் இல்ல, உண்மையாவே நீங்க உங்க மூளைய முக்கியமான விஷயத்தை பத்தி யோசிக்க வைக்குறீங்க,அதனால தான் நீங்க இருக்க இடத்தை சுத்தமா வைக்க முடியலேனு எண்ணுறீங்கனா,உண்மையாவே நீங்க Highly intelligentஆன ஆள்தான்.
5.Staring into space
யாராவது வெட்ட வெளிய அதிக நேரமா வேடிக்க பார்த்துட்டு இருக்குறதை நீங்க எப்போயாச்சும் note செய்துருக்கீங்களா?இல்ல, நீங்க இப்படி அடிக்கடி சும்மாவே வேடிக்கை பார்ப்பீங்களா?நீங்க நம்புவீங்களோ, மாட்டீங்களோ..! Highly intelligent ஆன மக்களுக்கு இப்படி வேடிக்கை பார்க்குற பழக்கம் இருக்கும்.
அதுலயும் சில நேரம், இப்படி வேடிக்கை பார்த்துட்டே அவங்களுக்கு எண்ணுகிற எண்ணத்துலயே மூழ்கிடுவாங்க.இந்த மாதிரியான, அமைதியான காலங்களில அவங்க பகல் கனவு காணுவாங்க, இல்ல எதையாச்சும் மூளையில் திட்டம் போடுவாங்க.இப்படி யோசிக்குறனால, அவங்களோட அனுபவம் வாயிலாக சில பிரச்சனைகளை தீர்ப்பாங்க.
நமக்கு, வெளியில இருந்து பார்க்குறப்போ இவங்க ஏன் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கனு நினைக்கும்.ஆனா, அவங்க இப்படி சும்மா ஒரு பகுதியை அடிக்கடி பார்க்குறனாலயோ என்னமோ,அவங்க இன்னும் பாதுகாப்பா இருக்காங்க.
6.Freezing showers
இங்க இருக்க நிறைய பேரு, காலையில தன்னோட களைப்பை நீக்குறதுக்கும், அந்த நாள்ல நாம்ம சுறுசுறுப்பா இருக்கனும்னு நினைச்சு வெண்ணீருல குளிப்போம்.ஆனா, பல புத்திசாலியான மக்கள் கொஞ்சம் வித்தியாசமா குளிர்ச்சியான தண்ணியில குளிக்குறதைதான் விரும்புறாங்க.அப்படி,
இப்படி குளிரான தண்ணியில குளிக்குறதால, நம்ம மூளை அதிக புத்துணர்ச்சியோட அந்த நாள் முழுதும் இருக்கும். குறிப்பா, இப்படி குளிக்குறனால நம்ம ஆற்றல் boost ஆகவும் செய்யுது.குளிரா இருக்குற தண்ணி, நம்ம உடம்புல படுறப்போ ஒரு current shock போல நம்மளை தட்டி எழுப்புது.இது விழிப்புணர்வோட இருக்கிறதுக்கு மட்டும் உதவல, இன்னொரு விதத்துல நாம்ம Concentration ஐயும் மனநிலையையும் நல்லா முனேற்றம் பண்ணுது.
பல smartஆன மக்கள், குளிரான தண்ணியில குளிச்சதுக்கு பிறகு அந்த நாளை தொடங்குறது, நல்லா இருக்குதுனு உணருறாங்க.அதனால, நீங்களும் இனிமேல் குளிரான தண்ணியில குளிச்சு, இந்த பயன்கள் எல்லாத்தயும் reach பண்ணுங்க.
7.Lively Debates
Highly intelligent ஆன மக்கள், ரொம்ப நேரங்களில Debate பண்றதை விரும்புவாங்க.அவங்களோட பக்கம் தவறு இல்லாம இருக்குதுன்றதுக்காக, இவங்க இப்படி விவாதத்துல இறங்கனும்னு எண்ணமாட்டாங்க. அடுத்த பக்கத்துல இருந்து, என்ன மாதிரியான Discussion வருதுன்றதை பார்க்க இப்படி விவாதத்துல இறங்க நினைக்கிறாங்க.
அந்த விதத்துல, இவங்க ஒரு பக்கம் மட்டுமில்லாம 2 பக்கமுமே தன்னோட விவாதத்தை சொல்லுவாங்க.அவங்களோட பார்வையில, ஒன்னை மட்டும் நம்பி argument பண்றதை விட, 2 பக்கமும் உள்ள விவாதங்களை கேட்டா நல்லா இருக்கும்னு அவங்க நினைப்பாங்க.ஒரு விஷயத்தை தெறிஞ்சுக்க, மத்தவங்ககிட்ட கேள்வி கேக்குறதும்,
ideas வருதானும் பார்க்கவும்,, மத்தவங்ககிட்ட சவால் பண்றதும்கூட,உங்களை புத்திசாலி ஆன ஒரு ஆளா மாத்துது.நீங்க ஒரு intelligent ஆன ஆளா இருந்தா, மத்தவங்களை மாதிரி ஒரு விவாதம் பண்றதை சண்டை போடுறதுனு நினைக்க மாட்டீங்க. அதுக்கு பதிலா, அந்த விவாதம், இல்ல வாக்குவாதம் வழியாக உங்களுக்கு அதிகமா இன்னொரு கோணம் கிடைக்கும்,அதுமூலமா புதுசா ஒரு செயலை கத்துக்கலான்ற வாய்ப்பை ஏற்படுத்திக்க நினைப்பீங்க.
8.Sedentary habits
இங்க இருக்க ரொம்ப பேர் ரொம்ப productiveஆ இருக்கனும், உடற்பயிச்சில்லாம் பண்ணி ஒரு active ஆன வாழ்க்கைமுறைய வாழ நினைப்பாங்க.ஆனா, Highly intelligent people அனைவரும் உட்கார்ந்தே இருக்க sedentary வாழ்க்கைமுறைல தான் இருக்காங்க.
ஒரு இடத்துல உட்கார்ந்தே இருக்கோமே, activeஆ இல்லேனு உங்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலும், உங்களோட பணிக்காக நீங்க ஒரு இடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதான் ஆகனும்ன்ற சூழ்நிலை இருக்கலாம்.
பல creative and innovative projectல பணி செய்றது உங்களுக்கு ஆர்வமா இருக்கலாம்,ஆனா அந்த projects அனைத்தும் ஒரே இடத்துல உட்கார்ந்து பல மணி நேரம் system ஐ பார்க்குற பணியா இருக்கும்.நீங்க பல நபரை விட, ரொம்ப productive ஆன நபரா இருக்கலாம்.
ஆனா, highly intelligent peopleக்கு இப்படி ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை செய்றது ரொம்ப பொதுவான விஷயம்தான்.இந்த மாதிரியான smart peopleக்கு fulfillingஆ ஏதோ ஒரு பணி இருந்துச்சு அப்படினா, அதை விட்டு வேற ஒரு பணியை செய்ய இவங்க போக மாட்டாங்க.
9.Unrealistic preparation
அறிவாளியான ஆட்கள் அவங்க செய்ய போற அனைத்து வேலைக்கும் அதிகமா முன்னேற்பாடு செய்வாங்க.ஒரு வேலையை செய்ய தொடங்குவாங்க, அதை செய்றதுக்கான அனைத்து possibilities ஐயும் தேடுவாங்க, அடுத்ததா அவங்களோட சாதனையை அடையுறதுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவாங்க.
உதாரணமா, ஒரு intelligentஆன நபர் ஒருத்தர் நடனம் ஆடுற புது பழக்கத்தை கத்துக்கனும்னு நினைக்குறாருனு வச்சுப்போம்,சில நபர், கூட்டத்துல நடனம் ஆடுறேன்ற பேருல யாரும் பார்க்காத மாதிரி குதிச்சுட்டு இருப்பாங்க,
நாம்ம எவ்வளோ மோசமா நடனம் ஆடுறேன்றதை பத்திலாம் யோசிக்காம, அவங்களோட சந்தோஷத்தை நடனம் மூலமா வெளிப்படுத்திட்டே இருப்பாங்க.ஆனா, புத்திசாலியானவர்கள் இப்படியெல்லாம் தேவையில்லாதவற்றை எடுக்க மாட்டாங்க.முதல்ல மேடை ஏறி ஆடாம, கூட்டத்தோட கூட்டமா நிண்டு வேடிக்கை மட்டும் பார்ப்பாங்க.
அது மூலமா சில தகவலை collect செஞ்சிப்பாங்க.அதுல மத்தவங்க ஆடுறப்போ என்னலாம் பிரச்சனைகளை சந்திக்கிறாங்க என்பதை note பண்ணுவாங்க.ஏன்னா, முதல்ல சொன்னது போல ஒரு கூட்டத்தோட கூட்டமா ஆடிட்டு போறதை புத்திசாலியானவர்கள் விரும்ப மாட்டாங்க.
எந்த ஒரு வேலையும் எனக்கு தெரியாதுனு சட்டுன்னு ஒத்துக்க மாட்டாங்க.இன்னொரு வகையில, தங்களோட செயல்பாடுகள் எப்பொயும் உயர்வாக இருக்கனும்ன்றதுக்காக தொடர்ந்து effort போடுவாங்க.அது புது விஷயமா இருந்தாலுமே, தன்னோடசிறப்பை மட்டுமே குடுக்க விரும்புவாங்க.
அது ஒரு hobby,job,relationship, அப்படினு எதுவா இருந்தாலுமே அதுல தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நல்ல perform செய்ய விரும்புவாங்க. அவங்க 100% தயாரான மட்டும்தான் ஒரு வேலையை செய்ய ஆரம்பிப்பாங்கனு சொல்லலாம்.அதனாலயோ என்னமோ, பல smart people risk எடுக்குறதே கிடையாது.
10.Creating Problems
புத்திசாலியானவர்கள் உண்மையாவே பிரச்சனையை நன்றாக தீர்க்ககூடியவங்க.ஆனா, சில நேரம் அவங்களுக்கு உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம் என்ன அப்படினா,உண்மையாவே இருக்காத ஒரு பிரச்சனையை tackle செய்யனும்னு நினைப்பாங்க.ஒரு smart ஆன நபருக்கு ஒரு வேலையை செய்யகூடாதுன்றதுக்கான உண்மையான காரணம் தெரிஞ்சுருக்கும்.
இதேது ஒரு intelligentஆன நபருக்கு, ஒரு காரணம் தெரிஞ்சாலே, அதை வச்சே 10 காரணங்களை உருவாக்குவாங்க. தீர்வே வேண்டாங்கிற பிரச்சனைகளை தீர்க்க நினைக்குற பழக்கத்தை highly intelligent people வச்சுருக்காங்க.அதுல அதிக நேரத்தை வீணாக்குறதனால, வேலையில சில நேரம் focus செய்யமாட்றாங்க.இந்த ஒரு குறை, highly intelligent ஆன நபர்களுக்கு பொதுவாவே இருக்கு.நீங்க distract ஆவுறதை விரும்புறீங்க அப்படினா,உங்களைவிட யாராலயுமே, அந்த distractionஐ சரினு justify செய்யவே முடியாது.அதனால, Highly intelligentஆன ஆளா இருக்குறது சில நேரங்களில பிரச்சனையை ஏற்படுத்த காரணமா இருக்குதுன்றதை நாம்ம புருஞ்சுக்கனும்.
11.Repetitive Failures
பல புத்திசாலியானவர்கள், சீக்கிரமா சில விஷயங்களை கத்துக்குறனால, தாங்களாகவே அந்த பிரச்சனைகளை தீர்த்துக்குறாங்க. ஒரு சூழ் நிலையில இருந்தா, தனக்கு எதெல்லாம் நடக்கும்ன்றதை தொடர்ந்து சிந்திக்குற நபர்களா இருக்காங்க. இந்த ஒரு பழக்கம் இருக்கனாலகூட, மத்தவங்க தோத்து போற விஷயங்களில கூட இவங்க வெற்றியடைஞ்சி முன்னேறுறாங்க.அவங்களோட மூளையால கூட சந்திக்க முடியாத பல பிரச்சனைகளுக்குள்ள போறதும்,அதை சவாலாகவும் மாத்தி சமாளிக்குற திறமை இவங்ககிட்ட இருக்கு.
ஒரே வேலையை ஒரே மாதிரியா செஞ்சு, அதுமூலமா வித்தியாசமான முடிவை generate பண்ணனும்ன்ற யோசனையில இவங்க இருப்பாங்க.அவங்க எதை நல்லா செய்வாங்களோ, அதையே தொடர்ந்து செய்ய எண்ணுவாங்க.முக்கியமா அவங்களோட Gut எத சொல்லுதுன்றதை கேப்பாங்க. அவங்களோட பலம் என்ன ? பலவீனம் என்னென்ன என்பது அவங்களுக்கு தெரிஞ்சுருக்கும். சில நேரங்களில, சின்ன விஷயத்துல இவங்க தோத்து போய்ருவாங்க. ஏன்னா, அவங்க செய்றது அனைத்தும் சரினு நம்புவாங்க.
தன்னோட அணுகுமுறை மாத்துறதையும், இவங்களுக்கு மத்தவங்ககிட்ட உதவி கேக்கவும் தெரியாது.ஏன்னா, வெற்றி அப்படின்றது தன்னை சார்ந்த்துனு தவறான கணக்கு போடுவாங்க.இப்படி, சில நேரம் எதிர்பாராத தோல்விகளை பாக்கறப்போ, அவங்க இன்னும் கற்றுக்கொள்ளவும் மேலும் expand பண்ண நினைப்பாங்க.ஆனா, ஒரே செயலை செஞ்சு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்க்காம, புது விஷயங்களையும் செய்ய முயற்சி செய்யனும். அப்படி நாம்ம புது விஷயங்களை செய்ய முயற்சி செய்யல அப்படினா,நீங்க எவ்வளோ பெரிய புத்திசாலியா இருந்தாலும், ஒரு பிரச்சனையில இருந்து வெளிய வருவதற்கு முடியாது.
12.Solitary conversations
Highly intelligent people, தனக்குத்தானே பேசுற பழக்கத்தை உள்ளவங்களா இருப்பாங்க.தனக்குத்தானே பேசுனா, அனைவரும் பைத்தியம்னு நினைப்பாங்கனு நீங்க awkwardஆ நினைக்கலாம்.ஆனா, awkward ஆ உணருற அளவுக்கு இது ஒன்னும் அவ்வளோ பெரிய காரியம் இல்ல.
தனக்குத்தானே பேசிக்கொள்வதும், தன் கிட்ட பேசுறதும் நம்ம மூளை activeல இருக்குது என்பதுக்கான அடையாளம். இப்படி பேசுறப்போ, அவங்க தன் கிட்ட ரொம்ப அமைதியா பேசுவாங்க.ஏதோ ஒரு பாட்டு பாடுவாங்க, இல்ல தன்னை சுத்தி என்னவெல்லாம் நடக்குதுன்றதை கண்ணாடி முன்னாடி நிண்டு பேசுவாங்க.
ஏன்னா, இப்படி பேசுறனாலகூட சில நேரம் அவங்களோட மூளை, ideasனால நிரம்பும்.இதுமூலமா, அவர்களுடைய மூளையை அவங்க கிட்ட engage பண்ண தூண்டு வாங்க.அதனால நீங்களும், ஒரு highly intelligent ஆன நபரா இருந்தா, நீங்களும் கண்ணாடி முன்னால் நிண்டு பேசுற பழக்கம் இருக்கும்.
இந்த self talkதான் மத்தவங்களை காட்டிலும், உங்களை அதிகமா smarterஆ வைக்குதுனு சொல்லலாம். இதை படித்து பார்த்த 12 ல ஒன்னு, உங்களிடம் இருக்கலாம், இல்ல உங்ககூட பழகுறவர்களிடம் இருக்கலாம்.இந்த habitsலாம் இருக்க ஒருத்தர் கண்டிப்பா புத்திசாலியான நபரா இருப்பாருனு உங்களுக்கு இந்த கட்டுரையின் மூலமா தெரிஞ்சுருக்கும்.
நன்றி மீண்டும் வணக்கம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here