Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

குஷ்பு காட்டிய கவர்ச்சியால் அடைக்கப்பட்ட ஓட்டைகள் : பிரம்மா படம் ஒரு பிளாஸ் பேக்!..

மறைந்த இயக்குநர் கே. சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, பானுப்ரியா நடித்த திரைப்படம் "பிரம்மா". நம் காதுககளில் நிறையவே பூ சுற்றி இருப்பார்கள். படம் ஓடியதால் கிடைத்த…

மறைந்த இயக்குநர் கே. சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, பானுப்ரியா நடித்த திரைப்படம் “பிரம்மா”. நம் காதுககளில் நிறையவே பூ சுற்றி இருப்பார்கள்.

படம் ஓடியதால் கிடைத்த லாபத்தின் சந்தோஷ வெளிப்பாடாக நூறாவது நாள் விழாவில் சத்யராஜே இதை வழிமொழிந்திருந்தார்.

ஒரு காட்சியில் ஏரோஃபிக்ஸ் உடையணிந்து குஷ்பூ பயிற்சி செய்து கொண்டிருப்பார்.

“இரவு உன்னிடம் பேச வேண்டும் தனியாக காத்திருக்கவும்” என்று ஒரு பேப்பரில் எழுதி ரோஜா பூவை இணைத்து  குஷ்பூ அறை ஜன்னலில் கொண்டு வந்து சத்யராஜ் வைப்பார்.

Advertisements

அந்த சமயத்திலேயே பேசி இருக்கலாம், ஏன் இரவு மீண்டும் ஒருமுறை ஹாஸ்டலுக்குள் வரவேண்டும்  என்று யோசிக்க முடியாத அளவுக்கு அந்த உடையில் குஷ்பு கலக்கலாக இருப்பார். சொல்ல வந்த விஷயம் இதுவல்ல, இளையராஜாவின் இசை.

ஆம், பேப்பரின் மேல் இருக்கும் பூவை குஷ்பூ எடுக்கும்போதே தண்ணீர் சலசலத்து ஓடுவது போன்ற இசையை பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. அடுத்த காட்சியில் தண்ணீரை காட்டப் போகிறார்கள் என்று முன்பே ‘லீட்’ கொடுத்திருப்பார்  இசைஞானி. அடுத்த காட்சியில் அந்த பேப்பர் கீழே விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்படும்.

பின்னணி இசைக்கு, என்றுமே இளையராஜா என்பதை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டி படம் “பிரம்மா”.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here