ஐதராபாத்தில் துணிக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் ரசிகர்களிடம் சிக்கி திணறி தப்பித்து தனது காரில் சென்று விட்டார்.
நடிகைகள் தான் சிறப்பு அழைப்பாளர்கள்..
தற்போது துணிக்கடை திறப்பு விழா என்றாலும்; நகைக்கடை திறப்பு விழா என்றாலும் நடிகைகளை தான் கூட்டி வந்து அவர்கள் கையால் திறந்து வைப்பது வழக்கம். தற்போது இது அதிகரித்தும் வருகிறது. அந்த வகையில் ஐதராபாத்தில் ஒரு துணிக்கடை திறப்பு விழாவிற்கு நடிக்க பிரியங்கா மோகன் சிறப்பு அழைப்பாளராக சென்றுள்ளார்.
அப்போது நடிகை பிரியங்கா மோகன் துணிக்கடையை திறந்து வைத்துவிட்டு, மைக்கை பிடித்து ரசிகர்கள் முன் பேசி உள்ளார். பிறகு துணிக்கடையை விட்டு வெளிய வருவதற்குள் அவர் படாத பாடு பட்டுவிட்டார்.

தப்பித்த நடிகை..!
காரணம் நடிகை பிரியங்கா மோகனை பார்ப்பதற்காக ரசிகர்கள் அவரை சூழ்ந்து விட்டார்கள். ரசிகர்களின் பிடியிலிருந்து பவுன்சர்கள் உதவியுடன் பிரியங்கா மோகன் தப்பித்து தனது காலில் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


