அஜித் குமாரின் ரேஸிங் அண்ணியுடன் எனர்ஜி பார்ட்னராக இணைந்திருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் உச்சம் பெற்ற முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் சினிமாவை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறார். கார் ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கி தனக்கென தனி ரேசிங் அணியை அமைத்திருக்கிறார். இந்த அணி துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று அனைவரையும் அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்ற அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து உலகளவில் கவனத்தை ஈர்த்து பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதற்காக கடுமையாக முயற்சி செய்து வரும் அஜித் குமாரின் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) இணைந்து பணியாற்றும் புதிய கூட்டணி அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,
முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கி வரும் இந்த நிறுவனம், தனது பிரபலமான எனர்ஜி டிரிங்க் பிராண்டான “கேம்பா (Campa Energy)”யை அஜித் குமாரின் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்கவிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் இந்த கூட்டணியை அதில் ஒரு பகுதியாகவே பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கூட்டணி இரண்டு பிராண்டுகளுக்கும் உலகளாவிய அளவில் அதிகமான அங்கீகாரம் கிடைக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


