நயன்தாராவால் தயாரிப்பாளர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்துள்ளதா! உண்மையை போட்டு உடைத்த பத்திரிகையாளர்கள்

0
87

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஷூட்டிங்கில் அவர் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, தன்னுடன் வரும் துணை ஆட்களுக்கு நயன்தாரா சம்பளம் தர மாட்டாராம். அப்படத்தின் தயாரிப்பாளர் தான அவர்களுக்கும் சம்பளம் கொடுப்பாராம்.

இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும், இது என்னடா கொடுமை என்று சொல்லி வருகிறார்கள். மூத்த பத்திரிகையாளர்களான பிஸ்மி மற்றும் அந்தணன் இருவரும் தான் இது பற்றி பேசியுள்ளார்கள். நயன்தாரா மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகை கங்கனாவும் தமிழில் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தபோது இவரும் இப்படி தான் செய்தாராம். தன்னுடன்ஷூட்டிங்கிற்கு வரும் நபர்களுக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் தர வேண்டும் என நிபந்தனை போட்டதாக பத்திரிகையாளர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற செயல்கள் தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறது. மலையாளத்தில் எல்லாம்இது மாதிரி நடக்கவே நடக்காது. அங்கு நடிகர்களுக்கு சம்பளம் பேசிவிட்டால் அவ்வளவு தான். அதன் பிறகு அவர்கள் அழைத்து வரும் துணை ஆட்களுக்கு எல்லாம் அவர்களே செலவு செய்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here