Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

அந்த துரோகம் மறக்க முடியாது! மனம் திறக்கும் பிரசாந்த்.. மிகவும் கஷ்டப்பட்டு இருப்பாரு போலயே

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக என்றுமே ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தின்வாயிலாக மறுபடியும் ரசிகர்களை சந்திக்க வருகிறார்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக என்றுமே ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தின்வாயிலாக மறுபடியும் ரசிகர்களை சந்திக்க வருகிறார் பிரசாந்த். அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. படம் எடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வெளியாக இருக்கிறது.

படத்தில் பிரசாந்துடன் இணைந்து பெரிய பெரிய ஜாம்பவான்களும் நடித்திருக்கின்றனர். ஆல் டைம் ஃபேவரைட் ஜோடியான சிம்ரனும் இந்தப் படத்தில் மறுபடியும் பிரசாந்துடன் இணைந்துள்ளது ஒரு வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பல சேனல்கள் பிரசாந்தை, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அதில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஏராளமான படங்களை தவறவிட்ட ஒரு தகவலையும் பிரசாந்த் சொல்லியிருக்கிறார். அஜித், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ரிலீசான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது பிரசாந்த் என எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ஐயோ நடிக்காமல் விட்டுவிட்டோமே என என்றைக்காவது வருத்தமடைந்தது உண்டா? என்ற கேள்வியை பிரசாந்த்திடம் கேட்க அதற்கு அப்படியெல்லாம் வருத்தப்பட்டதே இல்லை. அந்த நேரத்தில் வேற ஒரு கமிட்மெண்ட்டில் இருந்தேன். இதை விட அதுதான் எனக்கு முக்கியமானதாக பட்டது’ என தெரிவித்தார்.

Advertisements

அதோடு ஷங்கர் முதலில் காதலன் படத்தில் நடிப்பதற்கு பிரசாந்தைத்தான் அணுகினாராம். அப்போது வேறொரு கமிட்மெண்டில் இருந்துள்ளாராம் பிரசாந்த். இப்படி எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் தெரிவித்தார். மேலும் என்னுடைய ஒரு படம் வெற்றி அடைந்தால் அதை கொண்டாடியதும் இல்லை. தோல்வி பெற்றால் அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதே போல் நான் நடிக்க இருந்து அதை இன்னொரு நடிகர் நடித்து வெற்றி அடைந்தாலும் அதை மகிழ்ச்சியாகத்தான் பார்த்திருக்கிறேன். அதுதான் சினிமாவில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நல்லது என பிரசாந்த தெரிவித்தார். இந்த நிலையில் துரோகம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி என்ன நினைக்கிறீர்கள் என தொகுப்பாளினி கேட்டார்.அதற்கு பிரசாந்த் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து அது ஒரு எமோஷன். நம்பினவர்கள் ஏமாற்றுவது தான் துரோகம். என் வாழ்வில் அதுதான் நடந்தது’ என தெரிவித்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here