நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”எல்லோருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். சந்தோஷமாக இருக்கிறேன்.
‘அந்தகன்’ திரைப்படம் அருமையான படைப்பு. இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகில் முன்னணி உச்ச நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க முடியாத அனுபவம் இருக்கிறது.
இதில் ஐயா கனி சாரை மறக்கவே முடியாது. நான் அவரை ஐயா என்று தான்கூப்பிடுவேன். சசிகுமாரையும் அவரையும் office ல் இருக்கும் போது நான் நேரில் போய் சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து நான் இருவரையும் பின் தொடர்கிறேன்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தேர்வு நடந்த போது இயக்குநரின் லிஸ்டில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு டைரக்டர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு ஷூட்டிங்கிக்கு வருகை தந்தார். ஒரு நேர்த்தியான தொழில் முறை நடிகர் அவர்.
இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும், ‘எனக்கு 3 வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை முடித்து விட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவர் கேரக்டராகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா இவர் என நான் அவரை பார்த்து வியந்தேன்.
நான் ஒவ்வொரு நேர்காணல் போதும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு ஷூட்டிங்கின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்று கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கேன் என்று குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதுள்ள தொழில் முறையில் ஆன பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.
இந்த திரைப்படத்தினை விளம்பரம் சேய்வதற்காக நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி உள்ளிட்டோர் இணைந்து பயணம் செய்தோம். அப்போது என் Phone ல் ஒரு குரல் ஒலித்தது. எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார். நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் என கூறினேன் நீங்கள் மட்டும் ஏன் தனியாக பயணம் போகிறீர்கள் நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் என சொன்னார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி ஐயா தான். அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளை சொல்லிக்கொள்கிறேன்.எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் அவருடைய இந்த ஆதரவிற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் சிம்ரனும் இதுவரை 6 படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். திரை உலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை, அற்புதமான நடனக் கலைஞர். எனக்கு உற்ற நண்பி. இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து பணி செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவருடைய கதாபாத்திரத்திற்கும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் காணும் போது தெரிந்து கொள்வீர்கள்.
இந்தப் படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் படி இருக்கும். இதுதான் இந்த திரைப்படத்தில் சிறப்பம்சம் என்றே குறிப்பிடலாம். ஒவ்வொரு கேரக்டரிலும் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
பிரியா ஆனந்த்- திறமையுள்ள சக நடிகை படப்பிடிப்பு தளத்தில் எல்லோரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் சந்தோஷத்தை பரவச் செய்வார்.
வனிதா விஜயகுமார்- என்னுடன் பிறந்த சகோதரி போன்றவர். எப்பொழுதுமே உற்சாகமாக இருப்பார். இந்த படத்தை எப்படி எல்லாம் விளம்பரம் பண்ண வேண்டும் என்பதில் அதிக ஆலோசனைகளை தந்து கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் அவர் நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
நடிகர்களை கடந்து கலை இயக்குநர் செந்தில் ராகவன், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்,இவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே தான் இருப்பார்கள் ஆனால் அவர்களது செயல் பேசும்.
யோகி பாபு, மோகன் வைத்யா மற்றும் ஊர்வசி என பலருடன் சேர்ந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
இந்த படத்தில் அருமையான மனிதரை சந்தித்தேன். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர்தான் முழு படத்தையும் உயர்த்தி பிடித்திருக்கிறார். அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் அநேக வித்தியாசம் இருந்தது. ஷூட்டிங் தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிக நல்ல நண்பர் என்னுடைய அப்பா தியாகராஜன். மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும் மற்றும் எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 9 ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை கொடுக்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெறிவித்தார்
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here