‘தி கோட்’ திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சியும், நள்ளிரவு 2 மணிக்கு இறுதி காட்சியும் என திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ‘தி கோட்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து ‘தி கோட்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார்.

படம் நாளை உலக முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது. அதிக தியேட்டர்களில் ஒரு தமிழ் படம் வெளியாவது இதுவே முதல்முறை.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here