விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியங்கா மோகன் மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தோரூரில் வணிக வளாக தொடக்க விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்து காயமடைந்தார். கூட்ட நெரிசல் காரணமாக மேடை சரிந்து விழுந்தது. இதனால் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன் உள்பட மேடையில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், சூர்யா என உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார் நடிகை பிரியங்கா மோகன்.
இந்நிலையில் தெலங்கானாவின் தோரூரில் மால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நடிகை பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மேடையில் அதிகளவில் ஆட்கள் நின்றதுதான் மேடை சரிந்த விபத்து ஏற்பட காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை பிரியங்கா மோகன் பங்ககேற்ற விழா மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்த செய்தியறிந்த அவரின் ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்னாச்சு? என்னாச்சு? என்று சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here