லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கத்திலான மலர்மாலை தங்கத்திலான பூக்கள் என கோடிக்கணக்கான பொருட்செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற எழுத்தாளரும் நடிகருமான வேத ராமமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழா.
எழுத்தாளராக அறியப்பட்ட வேல.ராமமூர்த்தி இப்போது தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் அவர் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர்; சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரது பேத்தி வைஷ்ணவிக்கு நடந்த திருமணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது.
வேல. ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவியின் திருமணம்தான் கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வைஷ்ணவி திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகன் என்பவரின் மகன் விஜய ராகுலை திருமணம் செய்திருக்கிறார். அந்தத் திருமணத்தில் மணமக்கள் இருவரும் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன மாலையை கழுத்தில் போட்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி தங்கத்தால் ஆன மலரையும் மணமகள் சூடியிருந்தார்.
இது ஒருபக்கம் இருக்க திருமணத்தில் மணமகள் அணிந்திருந்த நகை மட்டும் மொத்த 600 சவரன் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் வைஷ்ணவி அணிந்திருந்த புடவையின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்றும்; ப்ளவுஸ் 3 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரமாண்ட திருமணம் திருநெல்வேலியை மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here