நடிகர் செந்தில் என்னதான் இருந்தாலும் அந்த விஷயத்தில் வீக் தான்… ஓபனாக சொன்ன அவரது மனைவி

0
207

நடிகர் செந்தில்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் என்று சொன்னதும் முதலில் ஞாபகம் வருவது கவுண்டமணி-செந்தில் தான்.

இவர்களுக்கு அடுத்து பல பிரபலங்களின் பெயர் இடம் பெற்றாலும் எப்போதுமே இவர்கள் தான் டாப். இப்போதெல்லாம் கவுண்டமணி அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை, ஆனால் செந்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் வாயிலாக சினிமாவில் சிறிய கேரக்டரில் தோன்றியவர் செந்தில்.

அதன்பிறகு மிக வேகமாக சென்ற அவரது சினிமா பயணம் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இப்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

மனைவியின் பேட்டி

அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் செந்தில் மனைவி பேசும்போது, எனது கணவர் பணத்தை கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக்தான்.

இன்னும் சொல்லப்போனால் அவருக்கு பணத்தை கூட எண்ணத் தெரியாது, எல்லாவற்றையும் நான் தான் கவனிப்பேன்.

அதனால் கல்யாணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம், அவன் பண விஷயத்தில் வீக், அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதில் இருந்து சம்பளம், மற்ற வருமானம் என எல்லாவற்றையும் நானே கவனிக்க தொடங்கினேன்.

ஆனால் உதவி என்று யாருக்காவது செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை மட்டும் என்னிடம் கொடுப்பார் என கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here