வடிவேலு
தமிழ் சினிமாவிற்கு மதுரையில் இருந்து கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. இவருடன் சில வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டு தான் இருந்தார்.
மீண்டும் நாய் சேகர் returns திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் தோல்வியை சந்தித்தது. இதன்பின் மாமன்னன் படத்தில் முதல் முதலாக சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

உருக்கமாக பேசிய வடிவேலு
சினிமாவில் நடிகர் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது ராஜ்கிரண் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், ராஜ்கிரணை வடிவேலு மதிப்பது கிடையாது என்ற விமர்சனத்தை தொடர்ந்து வடிவேலு மீது வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு ராஜ்கிரண் தான் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். என்னுடைய அப்பா, அம்மாவிற்கு பிறகு எனக்கு உணவு கொடுத்ததும் ராஜ்கிரண் தான் என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார் வடிவேலு. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here