தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் காலகட்டத்தில், திரையரங்குகளில் வெள்ளி விழாக்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உயிர்பெற்றுள்ளது. திரையுலகில் தனது பொன்விழா ஆண்டை (50-வது ஆண்டு) நிறைவு செய்து நடைபோடும் இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் 25-வது புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செந்தில் – கோவை சரளா காம்போ ரீ-என்ட்ரி!
‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காலத்தால் அழியாத நகைச்சுவை விருந்து அளித்த கூட்டணி மீண்டும் களம் இறங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து நகைச்சுவை ஜாம்பவான்களான செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களின் கூட்டணி திரையில் மீண்டும் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை கலாட்டாவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்கம் மற்றும் எழுத்துப் பணிகள்:
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
- நகைச்சுவைப் பகுதி: ராஜகோபால்
- வசனம்: ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம்
- மக்கள் தொடர்பு (PRO): கோவிந்தராஜ்
பாடல் பதிவுடன் பணிகள் விறுவிறுப்பு!
‘செண்பகமே செண்பகமே’, ‘மாங்குயிலே பூங்குயிலே’ எனத் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத கிராமத்துப் பாடல்களை அள்ளிக் கொடுத்த இந்தக் கூட்டணியிடம் இருந்து மீண்டும் ஒரு இசைத் திருவிழாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ரசிகர்களின் இந்த நீண்ட கால ஏங்கலைத் தீர்க்கும் விதமாக, இப்படத்தின் பணிகளானது முறைப்படி பாடல் பதிவுடன் (Song Recording) இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முழுவீச்சில் படப்பிடிப்புத் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


