கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வந்திருக்கும் படம் மதகத ராஜா. சுந்தர். சி இயக்கத்தில் உருவானி இப்படம் தற்போது தியேட்டர்களில் சக்கை-போடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு மக்கள் மாபெரும் வரவேற்பை அளித்துள்ளனர்.
குறிப்பாக பார்க்க போனால் இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு முந்திய படமான அரண்மனை-3 மாபெரும் வெற்றியை பெற்றது. அதேபோல நடிகர் விஷால் அவர்களுக்கும் மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இந்நிலையில் இருவரின் கூட்டணியில் உருவான படம் “மதகத ராஜா”. இப்படத்தில், மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வை தந்தது.
குறிப்பாக மணிவண்ணன், மனோபாலா இருவரும் வரும் காட்சிகள் சிறப்பு. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் மனோபாலாவின் பிணத்தை வைத்துக் கொண்டு விஷாலும், சந்தானமும் செய்யும் அலப்பறைகள் அதிரடி சரவெடி ரகம்.

அந்த நீண்ட காட்சி முழுவதுமே அரங்கில் ஓயாத சிரிப்பலை. படத்தின் வெற்றிக்கு இந்த காட்சியே முக்கிய பங்காக இருக்கும். பிணமாக மனோபாலா வரும் காட்சிகளும், அதில் சந்தானம் அடிக்கும் கவுன்டர்களும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here