Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

“வேட்டையன்” பட கதையை யூடிப்பில் அவுத்து விட்ட பயில்வான் ரங்கநாதன்

படம் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது “வேட்டையன்”. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.  இந்தப் படம் பற்றி…

படம் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது “வேட்டையன்”. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். 

இந்தப் படம் பற்றி நிறைய யூடிப் சேனல்கள் பட ரீவூ போட்டிருந்தாலும். நம்ம பயில்வான் ரங்கநாதன் சார் சொல்லும் கதையே வேறு. அமர்களம் செய்துவிடுவார். அப்படிப்பட்ட பயில்வான் வேட்டையன் படத்தையும் விட்டு வைப்பாரா என்ன?

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்:  

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் ரஜினி காந்த். கல்வியில் எவ்வளவு தில்லுமுள்ளு நடக்கிறது, மோசடி நடக்கிறது என்பததான் படத்தின் கதை. ராணா டகுபதி கல்வித்தந்தையாக வரும் அவர், ஆசிரியர் ஒருவரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக  விசாரிக்க வரும் ரஜினி, அவரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள திட்டம் போடுகிறார். ஆனால், அமிதாப் பச்சன் இதை மறுக்கிறார்.  இதனால், அமிதா பச்சனுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் உருவாகிறது. 

Advertisements

இயக்குநரை பாராட்டிய பயில்வான்: 

இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தின் வசனங்கள் அனல் பறக்கும் அதே போல வேட்டையன் படத்திலும், அரசாங்கத்தையும், போலீசையும் வசனத்தால் தெறிக்கவிட்டுள்ளார். பல இடத்தில் ரஜினி பேசும் வசனத்திற்கு திரையரங்கில் கைத்தட்டல் காதை பிளக்கிறது. இதில் துஷாரா விஜயன் பள்ளிக்கூட ஆசிரியராக நடித்துள்ளார். அவரை சுற்றித்தான் கதையே நகர்கிறது. ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளனர். அதே ரித்திகா சிங்கும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். 

இதேசமயம் வேட்டையன் படத்தின் டிரெய்லரை பார்த்து உளறுகிறார் பயில்வான் ரங்கநாதன். அதிகாலையிலேயே எப்படி படம் பார்த்து, அதனை வீடியோவாக எடுத்து, பதிவு செய்யமுடியும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். எப்போதும் பயில்வான் ரங்கநாதன் உலகமே தனி தான்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here