சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை பல வருடங்களாக எடுத்து வருகிறார். அந்த படம் எப்போது முடிந்து வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அதற்கு முன்பாகவே இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வைரலானது. துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த அஜித் இப்போது குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

விடாமுயற்சி சில சிக்கலில் இருப்பதால் ஆதிக் ரவிச்சந்திரனோடு அவர் தற்போது கைகோர்த்திருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஒரு சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலும் கசிந்துள்ளது. ஐந்து இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரிசை கட்டியுள்ளனர்,
- மோகன் ராஜா
- சிறுத்தை சிவா
- வெற்றிமாறன்
- H வினோத்
- விஷ்ணுவர்தன்
ஆனால் அதில் சிறுத்தை சிவாவுக்கு பதில் மோகன் ராஜா இருகிறார் என்பது தான் ஆச்சர்யம். அவருடைய தனி ஒருவன் 2 தற்போது தள்ளி போயுள்ள நிலையில் அவருக்கு தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அஜித் லாக் செய்த இயக்குனர்
அத்துடன் சேர்த்து அஜித் படத்தையும் அவர் இயக்கப்போகிறார் என்பது தான் டபுள் ட்ரீட்டாக இருக்கிறது. இவர்கள் இருவரும் சமீபத்தில் ரகசியமாக சந்தித்துள்ள நிலையில் கதையும் ஓகே செய்யப்பட்டு விட்டது.
அதில் மோகன் ராஜா ஏகே 64 படத்தை இயக்குகிறாரா அல்லது ஏகே 65 படத்தை இயக்குகிறாரா என்பது சற்று இழுப்பறியாக உள்ளது. ஏனென்றால் சிறுத்தை சிவாவுக்கு ஹிந்தி ப்ராஜெக்ட்டும் இருக்கிறது.
அவர் அஜித்தை இயக்குவதற்கு முன்பு சிறுத்தை சிவா ஹிந்தி ப்ராஜெக்ட் படத்தில் கவனம் செலுத்தினால் மோகன் ராஜா தான் ஏகே 64 பட இயக்குனராக இருப்பார். அப்படி இல்லை என்றால் ஏகே 65 ஆவது படம் மோகன் ராஜாவுக்கு தான்.
ஆக மொத்தம் அஜித் இவரை தற்போது லாக் செய்துள்ளார் என்பது மட்டும் உறுதி. விஜய் விரைவில் சினிமாவுக்கு குட் பை சொல்ல போகும் சூழலில் அஜித்தின் இந்த வேகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here