Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ZEE5-ல் சாதனை படைத்த ‘தடயம்’: 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து படக்குழு நெகிழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்…

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று 100 மில்லியன் பார்வை நிமிடங்களை (Streaming Minutes) கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

சாதனைப் படைத்த ‘தடயம்’ தமிழில் வழக்கமாக வரும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்குகிறது. ZEE5 தளத்தில் இதற்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற ‘விலங்கு’, ‘அயலி’ போன்ற சீரிஸ்களை விட, மிகக் குறுகிய காலத்தில் இந்தச் சாதனையைத் ‘தடயம்’ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


வெற்றி விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள்:

Advertisements
  • நடிகர் சமுத்திரகனி: “ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்துள்ளது. நான் சின்னத்திரையில் 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்தப் பயணத்தில் இவ்வளவு நேர்மையாகப் பாராட்டுகளைக் கேட்கும் வாய்ப்பு அரிது. இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.”
  • கௌஷிக் நரசிம்மன் (ZEE5): “பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸ், ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது மிகப் பெரிய சாதனை. இதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான்.”
  • இயக்குநர் நவீன்குமார் பழனிவேல்: “இந்த வெற்றிக்குப் பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக ZEE5 கௌஷிக் சார் மற்றும் முகில் சார் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். சுமார் 20 நாட்களுக்குள் இந்த சீரிஸை முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அர்ப்பணிப்புடன் உழைத்த என் முழுக் குழுவிற்கும் நன்றி.”
  • தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா (Cocktail Cinemas): “இது எனக்குத் தயாரிப்பாளராக முதல் முயற்சி. அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.”
  • மூத்த நடிகர் அழகன் தமிழ்மணி: “இன்று இந்த மேடையில் என் மகனைப் (தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா) பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் அவனுக்கு என் வாழ்த்துகள். ‘தடயம்’ சீரிஸை நான் பார்த்தபோது, அது ஒரு திரைப்படத்தைப் போலவே இருந்தது.”
  • எழுத்தாளர் & நடிகை கொற்றவை: “என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாகப் பல தடைகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நவீன் அவர்களுக்குச் சிறப்பு நன்றி.”

மேலும், விழாவில் இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் KK, எடிட்டர் தினேஷ் குமார் மற்றும் நடிகர்கள் ராஜ்கிரண் தாஸ், பிரேம் உள்ளிட்டோரும் தங்கள் மகிழ்ச்சியையும், படக்குழுவினருக்கான நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.


‘தடயம்’ – கதைக்களம் என்ன? இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் காலத்தில், தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் நடக்கும் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News