Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

திருச்செந்தூரில் முருகனை தரிசித்த யோகி பாபு… மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பக்தர்கள்!

திருச்செந்தூரில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார். கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. யாமிருக்க பயமேன்,…

திருச்செந்தூரில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. யாமிருக்க பயமேன், மான் கராத்தே என்ற திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் சினிமாத்துறையில் கால் பதிக்க எந்த பின்பலமும், அழகும் தேவையில்லை திறமை இருந்தால் போதும் வென்றுவிடலாம் என்பதை காட்டி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறினார். முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், தனுஷ், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு கதாநாயகனாகவும் மண்டேலா, தர்ம பிரபு, கூர்கா என மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது யோகி பாபு இல்லாத படங்களே வெளியாவது இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெளியாகின்ற அனைத்து முக்கிய படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் யோகி பாபு அவ்வப்போது சிறப்பு மிகுந்த ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Advertisements

காலை நேரத்திலேயே திருச்செந்தூர் சென்றிருந்த யோகி பாபு வழிபாட்டு முறைகளை சரியாக செய்து முருகப்பெருமானை தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு அவரை காண வந்த சில பக்தர்களுடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்ட யோகி பாபு தன்னிடம் புகைப்படம் வேண்டி கேட்டு வந்த ரசிகர்களுடன் முகம் சுளிக்காமல் அன்போடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here