Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

கைகள் இல்லை என்றாலும் கன்யாகுமரி டூ மலேசியா! தங்கம் வென்று சாதித்த ‘பிளெஸ்ஸிங் சஜூ’ – கண்ணீர் மல்கப் பகிர்ந்த பின்னணி!

எனக்கு இரண்டு கைகள் இல்லை என்று நான் வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால், அப்படியேதான் இருக்க முடியும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் வெல்லலாம்!" -…

எனக்கு இரண்டு கைகள் இல்லை என்று நான் வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால், அப்படியேதான் இருக்க முடியும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் வெல்லலாம்!” – இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர், மலேசியாவில் நடந்த சர்வதேச டைக்குவாண்டோ (Taekwondo) சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற கன்யாகுமரி மைந்தன் பிளெஸ்ஸிங் சஜூ. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துள்ள கண்ணீர்க் கதையும், அவரது தன்னம்பிக்கையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்துள்ளது.

ரொனால்டோ டூ டைக்குவாண்டோ – அரிய பயணம்!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, கால்களால் கால்பந்து விளையாடி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார் சஜூ. அதைப் பார்த்த ஒரு மாஸ்டர், “உனக்குக் கால்கள் நன்றாக வருகின்றன, கால்களை மட்டுமே பயன்படுத்திச் சண்டையிடும் ‘டைக்குவாண்டோ’ விளையாட்டில் நீ சாதிக்கலாம்” என்று வழிகாட்டியுள்ளார். அப்படித் தான் இரண்டு கைகளும் இல்லாத இந்தச் சிங்கத்தின் சாம்பியன் பயணம் தொடங்கியுள்ளது.

25 வருடத் தியாகம் – பின்னால் இருக்கும் ‘அம்மா’ என்ற சக்தி!

“என்னால் முடியாது” என்று டீமோட்டிவேட் செய்தவர்களைப் புறந்தள்ளிவிட்டு ஓடிய சஜூவின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பலம் அவரது அம்மா.

“வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும், போன் பயன்படுத்துவது முதற்கொண்டு என் கால்களாலேயே செய்துவிடுவேன். ஆனால் சென்னை போன்ற வெளியூர்களுக்குச் செல்லும்போது கழிவறைப் பயன்பாட்டிற்கு அம்மாவின் உதவி தேவைப்படும், அதை நினைத்துக் கஷ்டப்பட்டிருக்கிறேன். 25 வருடங்களாக என்னை ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போல என் அம்மா தான் பார்த்துக் கொள்கிறார். அடுத்த அறையிலிருந்து எனக்காக அழுது அழுது பிரார்த்தனை செய்வார்” என்று சஜூ கூறியபோது ஒட்டுமொத்த அரங்குமே உருகியது.

அரசுக்கு உருக்கமான கோரிக்கை மற்றும் விஜய் வசந்திற்கு நன்றி!

சர்வதேசப் போட்டிக்குச் செல்ல பலரிடம் ஸ்பான்சர் கேட்டும் கிடைக்காத நிலையில், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் செய்த உதவியால் மட்டுமே மலேசியாவிற்குச் செல்ல முடிந்ததாக சஜூ நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். ஸ்பான்சர் கிடைக்காததால் தமிழ்நாட்டிலிருந்து அவரால் மட்டுமே செல்ல முடிந்துள்ளது, மற்ற மாற்றுத்திறனாளிகளால் வர இயலவில்லை.

Advertisements

மேலும், “கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்குத் தருவதில்லை. தங்கம் வென்று வந்த பிறகும் அரசு எந்தவொரு பரிசோ, கேஷ் பிரைஸோ தரவில்லை. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஒரு அரசு வேலை கொடுத்தால், அது எங்களது பொருளாதாரத்திற்குப் பெரிய துணையாக இருக்கும்” என்று இந்திய விளையாட்டுத் துறை மற்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here