பிரேம்ஜிக்கு தடபுடலாக நடந்து முடிந்த திருமணம்.. சீதனம் குறித்து சர்ச்சையை எழுப்பிய பயில்வான் -பரபரப்பு பேச்சு!

0
98

திருமணத்தின் போது பிரேம்ஜி எவ்வளவு சீதனம் வாங்கினார் என்பது பற்றி பரபரப்பு பேச்சாளர் பயில்வான் பேசியுள்ளார்.

பிரேம்ஜி – இந்து திருமணம்

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் தான் நடிகர் பிரேம்ஜி.

இவர் இந்து என்கிற பெண்ணை திருத்தணியில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் எளிமையான முறையில் நடக்கும் என வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் மட்டும் பங்கேற்றனர்.

பின்னர் மணமக்கள் வரவேற்பு விழா ஆடம்பரமாக நடந்ததாக சொல்லப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்கள் வைரலாகி வந்த பொழுது, புகைப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபலங்கள் ஏன் வரவில்லை? என்கிற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

1000 சவரன் சீதனம்

இந்த நிலையில்,இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இத்திருமணத்தில் பிரேம்ஜி பூணூல் அணிந்தார் எனவும் இந்து குடும்பத்தினர் பிரேம்ஜிக்கு அதிகமான சீதனம் வழங்கியுள்ளனர் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அந்த வகையில் பயில்வான், “ பிரேம்ஜி தன்னை காட்டிலும் 15 வயது குறைவான பெண்ணை தான் திருமணம் செய்திருக்கிறார். பிரபல வங்கியில் பணி செய்து வரும் இந்து ஒரு பிராமணப் பெண். அமரன் அவர்களை விலக்கி வெங்கட் பிரபு அப்பாவாக முன்னே இருந்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

மேலும் இந்துவை துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் செய்த பிரேம்ஜி முரட்டு சிங்கிள் என வெளியில் சொல்லிக் கொண்டு அலைந்தவர். திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் 1000 சவரன் நகைகளை சீர் வரிசையாக அளித்துள்ளனர் ” என பேசியுள்ளார்.

பயில்வான் இப்படி பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் பொய்யான கருத்துக்களை ஊடகங்களில் முன் வைத்துள்ளதால் பயில்வானுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here