விக்னேஷ் சிவனோடு அப்படி சண்டை போட்டேன்; நயன் தான் அதை செய்தாங்க – விஜய் சேதுபதி

0
72

விக்னேஷ் சிவனிடம் சண்டை பற்றி விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார்.

நானும் ரௌடிதான்

டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரௌடிதான். இந்த படம் தனுஷ் தயாரிப்பில் உருவானது. அந்த படத்தில் நயன்தாரா நடித்தார். படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் நடித்தபோதுதான்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கினர். அதன்பின் கல்யாணம் செய்துக்கொண்டு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

இந்த படத்தை லலித் தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி போன்ற நடிக்கின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பற்றி விஜய் சேதுபதி பேசுகையில்,

விஜய் சேதுபதி தகவல்

“நானும் ரௌடிதான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு பிறகு விக்னேஷ் சிவனை கூப்பிட்டு சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு சொல்லித்தர முயற்சிக்கிறீர்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை என்று கூறினேன். 4 நாட்களுக்கு பிறகு நயன்தாரா என்னிடம் வந்து உங்கள் 2 பேருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு சமாதானப்படுத்தினார்.

விக்கி திரைக்கதையைக் சொன்ன போது, ​​அது நன்றாக இருந்தது. ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு நேரம் பிடித்தது. அந்த கேரக்டரில் நடிப்பது சுலபமல்ல என்று விஷ்ணு விஷால் தான் சரியாகச் கூறினார் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த கதாபாத்திரம் புரியவில்லை.

அந்த நேரத்தில் நான் மிகவும் உறுதியாக இல்லாமல் இருந்தேன். விக்னேஷ் சிவன் ஒரு சிறந்த இயக்குனர். நியூ ஜெனரேஷன் தயாரிப்பாளர். நீங்கள் அவரை நம்பி சென்றால், அவர் உள்ளே நிறைய மேஜிக் செய்வார்” எனத் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here