‘அந்தகன்’ ரீமேக் இல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்
‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் ஹீரோவாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இவர்கள்இருவரும் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி உள்ளது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியுள்ளார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டார். இதனை அடுத்து விஜய் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் K.S. ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை வனிதா விஜயகுமார், நடிகை பிரியா ஆனந்த், நடிகர்கள் பூவையார், ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, மோகன் வைத்யா, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சோனி மியூசிக் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் அசோக் பர்வானி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டனர்.
இந்நிகழ்வில் படத்தின் டைரக்டர் தியாகராஜன் பேசும் போது , ”2019ம் வருடத்தில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் போட்டியிட்டார்கள்.
இந்தப் படத்தை எதற்கு வாங்க வேண்டும் எனற எண்ணம் தோன்றியது என்றால், அந்த படத்தில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் ஹீரோ. அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறு வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி மியூசிக் காலேஜில் பியானோ இசையில் 4 வது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமுள்ளதாக இருக்கும் என்று நினைத்து தான் இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன்.

படத்தை வாங்கிய பிறகு கொரோனா தொற்று நாடு முழுவதும் பாதித்த நிலையில் 2 வருட காலம் சென்றது. அதன் பிறகு பல இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற வகையில் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு பண்ணினோம். குறிப்பாக இதில் ஒரு மருத்துவர் கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநரும், நடிகருமான K.S. ரவிக்குமார் தான் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் அந்த கதையைக் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு மிகவும் அதிகம். அவருடைய திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.
நடிகை பிரியா ஆனந்த் ஒரு அழகான பெண். இந்த படத்தில் அவரை அழகாகவும், இளமையாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறோம். லண்டனின் வீதிகளில் அவர் நடந்து செல்லும் ஸ்டைலான நடையும், அவரின் அவுட்லுக்கும் எல்லோரும் ரசிக்கும் படியாக இருக்கும்.
நடிகை சிம்ரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் தனது திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து கொடுத்து இருக்கிறார். அவருடைய சிறப்பான நடிப்பிற்காக இந்த ஆண்டு அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்ததாக வனிதா விஜயகுமார்- அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படத்தில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கார்த்திக் பழம்பெரும் நடிகர் அவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஆரம்பித்த அவருடன் உண்டான நட்பு இன்றும் தொடர்கிறது. ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் நடித்த துள்ளலான நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம்.
அதேபோல் படத்தில் இடம்பெறும் சின்ன ரோலுக்கும் கூட பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு பண்ணி நடிக்க வைத்திருக்கிறோம். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூவையார், ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாதது.
நடிகை ஊர்வசி யோகி பாபுவுக்கு சகோதரியாக நடித்திருக்கிறார். ஊர்வசி என்னுடன் சில திரைப்படங்களில் இணையாக நடித்திருக்கிறார். பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ திரைப்படத்திலும் ஊர்வசி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒரிஜினலில் ஊர்வசி கேரக்டர் இருக்கிறது. ஆனால் தமிழில் அந்த கேரக்டரை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் ஊர்வசி- யோகி பாபு- K.S.ரவிக்குமார்- பிரசாந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை உற்சாகமாக்கும்.
பிரசாந்த் நடித்த ‘செம்பருத்தி’, ‘காதல் கவிதை’ போன்ற படங்களில் பணிபுரிந்த ரவி யாதவ் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிசெய்து இருக்கிறார். லண்டனில் இருந்த ரவி யாதவ் நான் அழைத்தவுடன் சந்தோஷமாக சம்மதித்து இந்த படத்தில் பணி செய்திருக்கிறார்.

ஒலி வடிவமைப்பாளர் லட்சுமி நாராயணன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் என அவரவர் துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களின் மனதில் வைத்து தான் இந்திப்பதிப்பில் இல்லாத பல விடயங்களை இந்த படத்தில் இணைத்திருக்கிறோம். அதனால் அந்தகன் ரீமேக் திரைப்படம் அல்ல ரீமேட் திரைப்படம். அதாவது மறு உருவாக்கம் பண்ணிய படைப்பு. அந்தகன் திரைப்படம் ரசிகர்களுக்காக நேர்த்தியாகவும், புதுமையாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உச்சகட்ட காட்சியானது பெரும் விவாதத்தை உண்டாக்கும். இது ரசிகர்களை மறுபடியும் திரையரங்கத்திற்கு வரவழைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் ரிலீசான பிறகு இந்தியில் ரிலீசான அந்தாதூன் திரைப்படத்திற்கும், தமிழில் வெளியாகி உள்ள அந்தகன் படத்திற்கும் மத்தியிலான வித்தியாசத்தை உணர்வீர்கள். இந்தியில் இடம் பெறாத பல விஷயங்களை நாங்கள் முக்கியத்துவம் அளித்து உருவாக்கியிருக்கிறோம். அதிலும் அந்தகன் திரைப்படம் பிரசாந்தின் 50 வது திரைப்படம் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இந்தத் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,,” என்று தெரிவித்தார்
இயக்குநர் – நடிகர் K.S. ரவிக்குமார் பேசும் போது, ”மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு இது. தியாகராஜன் சாரை என்னுடைய காலேஜ் பருவ நாட்களில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தேன். அவரும் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தார். அந்த வகையில் அவர் மீதுஎனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. அவர் தயாரித்த, நடித்த திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நான் நடித்து, இயக்கிய திரைப்படங்களை பார்த்திருக்கிறார். இப்படி தொழில் முறையில் உண்டான நட்புதான் எங்களுக்குள் இருந்தது.
இந்தத் தருணத்தில் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடிப்பதற்கு தியாகராஜன் அழைப்பு விடுத்தார். அவர் மீது எனக்கு இருந்த அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு இந்தி படத்தை பார்த்தேன். அற்புதமான படைப்பு. அதனை சாதாரணமாக ரீமேக் பண்ணினாலே வெற்றி கிடைக்கும். ஆனால் தியாகராஜன் சார் அப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் தேர்வு, பிரம்மாண்டமான தயாரிப்பு என பல விஷயங்களை பார்த்து, மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்.

படத்திற்காக சிறிய சமரசம் பண்ணி கொள்ளாமல் நேர்த்தியாக உருவாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் அவர் உபயோகப்படுத்திய மானிட்டர் கூட பிரம்மாண்டமாக இருக்கும். அப்போதே அவருடைய ஈடுபாடு நன்றாக தெரிந்தது . இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பிரசாந்த்திற்கு அந்தகன் 50 வது திரைப்படம் என்பது நான் இங்கு வந்த பிறகுதான் தெரியும். பிரசாந்த் 100 படங்களை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன். கண்டிப்பாக அவர் அதனை தொடுவார். காண்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றமுடன் இருந்தாலும் அவருக்கு குழந்தை மனசு.
இந்தத் திரைப்படத்தில் நான் நடிப்பதற்கு முன்பே ஏராளமான திரைப்பட நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்து இருக்கிறேன். நான் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பட தயாரிப்பு நிறுவனத்தின் அருகில் இருந்த வளாகத்தில் தான் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் அலுவலகம் இருந்தது. நான் 4 படங்களை இயக்கிய பின், அன்பாலயா பிரபாகரனுக்காக ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ எனும் திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்ட போது பிரசாந்த் பிசியான முன்னணி நடிகராகிவிட்டார்.
அந்த கால கட்டத்தில வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்றால்.. முதலில் பிரசாந்தை ஒப்பந்தம் பண்ணுங்கள் என்று தான் விழா குழுவினர் கோரிக்கை வைப்பார்கள். அந்த அளவிற்கு உலக நாடுகளில் பிரசாந்த்திற்கு ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகை ஊர்வசி நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஊர்வசி என்று பெயர் வைப்பதற்கு பதிலாக ராட்சசி என்றே பெயர் வைத்திருக்கலாம், அவர் அந்த அளவிற்கு திறமையான நடிகை.
இந்த படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். நன்றாகவும் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள்.அனைவரும் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு போன பிறகும் அவர்களின் மனதில் நிற்கும் படமாக இது இருக்கும், இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒரு முறை கேட்கும்போதே அத்தகன் ஆந்தம் பாடல் மனதில் பதிந்து விடுகிறது. இந்த ப்ரமோ பாடல் மட்டுமல்லாமல், படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசும் போது, ”இன்றைய தினம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தினம். என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் இந்த படம். இந்தத் திரைப்படத்தில் அற்புதமான ஒரு ரோல் கிடைத்திருக்கிறது அதில் திறமையாக நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு பல வாய்ப்புகள் வரும் என்பதால் இதை குறிப்பிடவில்லை. இது என் குடும்பம். தியாகராஜன் சார் என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி இன்றளவும் அவரை நான் நேசிக்கிறேன்.
பிரசாந்த் எனக்கு புதியவர் இல்ல. நான் 90களில் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு அவர் மீது கிரஷ் இருந்தது. என்னுடைய First டீன் ஏஜ் கிரஷ் பிரசாந்த் தான்.
அவருடன் கடந்த சில ஆண்டுகளாக பழகும் போது அன்பான நட்பு கிடைத்தது. அந்த நட்பு அழகானது. அந்த நட்பு மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் நல்ல மனிதர். அவரை எண்ணி நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அவருடைய பெருந்தன்மை, நேர்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு என அனைத்துமே அவருடைய தந்தையிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும், ‘இவர் (தியாகராஜன்) மாதிரி ஒரு அப்பா இருந்தால் அதுவே போதும் ‘ என்பார்.
இந்த திரைப்படம் தரமான படைப்பு. அருமையான நட்சத்திர கலைஞர்கள் மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்கள் ஒருகிணைந்த கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படைப்பை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த படம் அதுவாகவே விளம்பரத்தை தேடிக் கொள்ளும். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் எளிதாக தானாகவே சென்றடையும். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
நான் ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் பிற மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் சிறப்பாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பணி செய்யும் போது படப்பிடிப்பு தளத்தில் வேலைகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அப்பொழுதே கொடுத்து விடுவார். படத்திற்கு பின்னணி பேசும் போது 2 மடங்கு சம்பளத்தை கொடுத்தார். அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தரவில்லை. ஒரு நட்சத்திரத்தின் மதிப்பை தெறிந்து அதனை கவுரவப்படுத்தும் வகையில் அது இருந்தது.
நான் ஒரு பயணத்தின் போது எனது செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் என்னிடம் தொடர்பு கொண்டார். நான் பதட்டத்தில் உள்ளதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என்று கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை அன்பளிப்பாக கொடுத்தார், அதுதான் தியாகராஜன் சார்,” என்று கூறினார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசும் போது, ”இங்கு வந்த பிறகுதான் தமிழில் பணிசெய்து பல நாள் ஆகிவிட்டது என்ற உணர்வு தோன்றுகிறது. இந்த ஒட்டுமொத்த படக்குழுவில் டைரக்டர் தியாகராஜன் என்னுடைய நண்பர் என்று தான் கூறுவேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தியாகராஜன் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகத்தான் நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.அதே போல எல்லோரும் பிரசாந்த் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள். ஏராளமான சக கலைஞர்களுடன் பணிசெய்து இருக்கிறேன். ஆனால் அவர்களை விட பிரசாந்த் தனித்துவமிக்கவர். அவருக்கு சினிமா மீது பற்றும், தேடலும் அதிகம். இந்த திரைப்படத்திற்கு VFX காட்சிகளை மேற்பார்வையிட்டது பிரசாந்த் தான். சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நவீன தொழில்நுட்பங்களை குறித்து அவர் அறிந்து வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் பணியாற்றி இங்கு வந்து நிற்கும் போது தான் தாய் வீட்டிற்கு வந்த சந்தோஷம் கிடைத்திருக்கிறது,” என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசும் போது, ”இந்த அந்தகன் ஆந்தம் பாடலை ரிலீஸ் செய்த தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேட்டதும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டு, இதற்காக நேரம் ஒதுக்கி, இந்த பாடலை வெளியிட்டதற்காக அவருக்கு மறுபடியும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடலை உருவாக்கிய பிரபு தேவாவிற்கும் மற்றும் நடனம் அமைத்து கொடுத்த சாண்டி மாஸ்டருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடலில் பங்களிப்பு கொடுத்த அனிருத்திற்கும் மற்றும் விஜய் சேதுபதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படத்திற்கான ப்ரோமோ பாடலை வெளியிடுவதற்கு இந்த அளவு பிரம்மாண்டமாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் நட்சத்திர கலைஞர்களை இடம்பெறசெய்தும் அனைவரும் ரசிக்கும் விதமாகவும், எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களுக்கும் நட்சத்திர கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் தியாகராஜன் இந்த விஷயத்தில் நுட்பமாக கவனித்து திறமையாக செயல்பட்டு இருக்கிறார். கார்த்திக் சார், K.S ரவிக்குமார் சார், ஊர்வசி மேடம்,மனோபாலா சார், சமுத்திரகனி சார், யோகி பாபு சார், பூவையார், ஆதேஷ் பாலா, வனிதா விஜயகுமார், செம்மலர் அன்னம் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் அப்பா அழைத்தவுடன் அவர் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக படபிடிப்பு தளத்திற்கு வருகை புரிந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். அப்பா மீது இன்றளவும் குறையாத மதிப்பு மரியாதை வைத்திருக்கும் எல்லா கலைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்களே சேர்ந்து பணியாற்றினார்கள். ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கடுமையாக உழைத்து ஒவ்வொரு காட்சியினையும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கி இருக்கிறார்.இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக இருக்கிறது என எல்லோரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் தான். இதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்தோஷ் நாராயணனின் இசை, சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு மற்றும் செந்தில் ராகவனின் கலை இயக்கம் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் தங்களின் முழுமையான திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ‘என் காதலே…’ எனும் பாடலை டான்ஸ் மாஸ்டர் கலா 6 மணி நேரத்திலேயே நடனம் அமைத்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்தப் படத்தில் அப்பா எந்த விதமான காட்சிகளை திரையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ அதற்காக அனைவரும் உழைத்தார்கள். இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்க்கும் போது ஆனந்தம் அடைவார்கள். சந்தோசம் அடைவார்கள். நான் அந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் இன்றளவும் என் மீது அன்பும், பாசமும் காட்டும் அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.
நடிகை ஊர்வசி பேசும் போது, ”தியாகராஜன் சார் மிலிட்டரி மேன் போல அனைத்தும் நேரத்திற்கு ஏற்றவாறு சரியாக நடக்க வேண்டும் என நினைப்பார். 1984ம் வருடத்தில் தியாகராஜன் சார் தயாரித்த திரைப்படம் ‘கொம்பேறி மூக்கன்’ அதில் அவருக்கு நான் ஜோடியாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் நடிகை சரிதாவும் நடித்திருந்தார்.
அன்றிலிருந்து ஆரம்பித்த அந்த மரியாதைக்குரிய அன்பும், நட்பும் இன்றளவும் தொடர்கிறது. நான் பிரசாந்துடன் ‘தமிழ்’ படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் அவர் நல்ல நண்பர்.அவருடன் ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறேன்.
இந்த இருவருக்கும் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டு உதவி கேட்டாலும் அடுத்த நிமிடம் எனக்காக வந்து நிற்பார்கள்.
அந்தகன் நல்ல படம். நம்முடைய மண்ணிற்கு என்ன தேவையோ அந்த மாற்றங்களை செய்து இந்த படத்தை தியாகராஜன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அமைந்திருக்கும் நட்சத்திர கூட்டணி போல வேறு எந்த திரைப்படத்திலும் அமைந்திருக்காது., அமைந்ததுமில்லை. இந்த படம் நன்றாக ஓட வேண்டும், ஓடும் என்று நம்புகிறேன் அனைவரும் வாழ்த்துங்கள்,” என்று கூறினார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here