நயன்தாரா பிள்ளைகளின் ஆயாவிற்கும் தயாரிப்பாளர் தான் செலவு பண்ண வேண்டுமா.. பத்திரிகையாளர்கள் சொன்ன ஷாக்கிங் தகவல்

0
51

நடிகை நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவையும் கடந்து இந்தியளவில் பிரபலமாகி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜவான் திரைப்படம். இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் அளிக்கும் வகையில் தகவல் ஒன்றை பத்திரிகையாளர் பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

முன்னணி நடிகையான நயன்தாரா ஷூட்டிங்கில் தனக்காக பணி செய்யவரும் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கமாட்டாராம். அவர் எந்த படத்தில் நடிக்க இருக்காரோ, அப்படத்தின் தயாரிப்பாளரே அவரின் துணை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பார்களாம். அதே போல் கல்யாணத்திற்கு ஷூட்டிங்கிற்கு தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறோம்.

அப்போது நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் துணை ஆட்களுக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுப்பார்களாம். இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது என்னடா தயாரிப்பாளருக்கு வந்த சோதனை என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு இந்த நிலைமை. மலையாளத்தில் ஒரு நடிகர், நடிகைக்கு சம்பளம் என பேசிமுடித்துவிட்டு அக்ரீமண்ட் பண்ணி விட்டால் அவ்வளவு தான். அந்த நடிகர், நடிகைகள் கூப்பிட்டு வரும் துணை நபர்களுக்கு அந்தந்த நடிகர்கள் தான் செலவு பண்ணுவார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் தான் இப்படி பண்ணி கொண்டு வருகிறார்கள் என மூத்த பத்திரிகையாளர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறியுள்ளனர்.

நயன்தாரா மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க வந்தபோதும் இது போன்ற கண்டிஷன் போட்டுவிட்டு தன்னுடன் வந்த துணை ஆட்களுக்கு தயாரிப்பாளரை தான் செலவு பண்ண செய்தாராம். மேலும் இந்த பட்டியலில் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கின் போது தன்னுடைய 18 நபரை கூப்பிட்டு வந்தாராம் விஷ்ணு விஷால். இதனால் தயாரிப்பாளர் ஷாக்கிங்கில் உறைந்தே போய்விட்டார் என கூறியுள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here