விதிக்கு வந்த விஜய் டிவி விவகாரம் : பிரியங்காவால் விலகிய மணிமேகலை

0
348

விஜய் டிவியின் பிரபல பெண் தொகுப்பாளரான பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதலால், பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வி.ஜே மணிமேகலை அறிவித்துள்ளார். 

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இதற்குக் காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுகிறது. சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக உள்ளனர். குக் வித் கோமாளி 5வது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே குக்காக பங்கேற்றுள்ளார். பிரச்னையே அவங்க தான். இந்த நிலையில், தொகுப்பாளினி மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.

அடிக்கடி மணிமேகலையை நிகழ்ச்சியை சரியாக தொகுத்து வழதுங்க விடாமல் இடையே-இடையே குறுக்கீடு, பிரியங்கா  பிரச்னை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் விஜய் டிவி சேனல் பக்கம் சொன்னால் எந்தவித நடவடிக்கை எடுக்காமல், “ஷோ நல்லா தான போகுது அப்புறோம் என்னனு” அசால்டாக கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பிரச்னை தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரியங்கா-வுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. “ அந்தப்  பொண்ணுக்கு வாய் ரொம்ப அதிகம் தான்” என்று ரசிகர்கள் ஒருபக்கம் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here