Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்… மாதம்பட்டி மீது கோபத்தை வெளிப்படுத்திய ஜாய் க்ரிசில்டா!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா. தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவிட்டு நடிகர் மாதம்பட்டி மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல சமையல் கலை நிபுணரும்,…

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா. தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவிட்டு நடிகர் மாதம்பட்டி மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களது இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு instagram பக்கத்தில் ஜாய் க்ரிசில்டா தெரிவித்திருந்தார். அதன் பிறகு குழந்தையின் முகத்தை மறைத்தபடி அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர் . தற்போது குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வெளியிட்டு ரங்கராஜ் மீது உள்ள கோவத்தையும் தனது வலியையும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.

Advertisements

அதில் அவர், “நீங்கள் இதற்கு தகுதியற்றவர். இது வலியுடன் கொடுத்தது பெருமை அல்ல”. எனக் குறிப்பிட்டு அப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அச்சான்றிதழில் குழந்தையின்
தந்தையின் பெயர் T.ரங்கராஜ் தங்கவேல் என குறிப்பிட்டுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here