Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

மணி பிளாண்ட் செடியினை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க… பணப்பிரச்சினை உண்டாகும்

வீட்டிற்கு அழகுண்டாக்கும் மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் செல்வம் ஆகியவற்றுடன் நேர்மறை சக்தியை ஈர்க்கிறது, இந்த மணி பிளாட் ஒரு உட்புற தாவரம்…

வீட்டிற்கு அழகுண்டாக்கும் மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் செல்வம் ஆகியவற்றுடன் நேர்மறை சக்தியை ஈர்க்கிறது, இந்த மணி பிளாட் ஒரு உட்புற தாவரம் என்ற வகையில் மிகவும் மங்களகரமானது.

வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த தாவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகின்றது.வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளது போல் இருக்க வேண்டும்.

தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை சக்திகளை அதிகரித்து, வீட்டில் பலவிதமான கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளையும் வீட்டில் வைக்க வேண்டி இருந்தாலும், அவற்றை வாஸ்து பார்த்து, அதன் படி வைக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்தவகையில் மணி பிளாண்டை செடியை வீட்டில் எந்த திசையில் வைத்தால் செல்வ செழிப்பு மேலோங்கும் எனவும் எந்த திசையில் வைப்பதால் பணப்பிரச்சினை கூடுதலாக்கும் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

எந்த திசையில் வைப்பது சிறந்தது?

மணி பிளாண்ட் ஒருவரது வீட்டின் நிதி நிலையை அடையாளப்படுத்த கூடியதாக அமைகின்றது. இதனால் தான் பலர் செல்வ செழிப்பு அதிகரிக்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் வீட்டில் மணி பிளாண்ட்டை வைக்கின்றார்கள்.

ஆனால் இந்த மணி பிளான்ட் தாவரத்தை வீட்டில் தவறான திசையில் வளர்ந்தால் நிதி தொடர்பான பாதக விளைவுகளை சந்திக்க வேண்டியதாக அமையும். பொதுவாக, வீட்டில் வைத்திருக்கும் மணிபிளாண்ட் வளர வளர, வீட்டில் செல்வம் பெருகும் என்றும் தொழில் ரீதியில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும் எனவும் வாஸ்து நிர்ணர்கள் கூறுகின்றனர்.

Advertisements

மேலும் மணி பிளாண்டின் தண்டுகள் ஒருபோதும் தரையைத் தொடும் மாறு வைக்க கூடடாது. அவ்வாறு தரையில் பட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

அது மாத்திரமில்லாமல் மணி பிளாண்ட் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினாலோ அல்லது காய்ந்தாலோ உடனடியாக அவற்றை அதிலிருந்து அகற்ற வேண்டியது மிகவும் அவசியம்.இதுவும் பணப்பற்றாக்குறையை உண்டாக்கும்.

தவறுதலாக கூட மணி பிளாண்ட் செடியை வடகிழக்கு திசையில் வைக்கவே கூடாது. அவ்வாறு வைப்பதால் எதிர்மறை சக்திகள் அதிகரிப்பதுடன் நிதி தொடர்பான அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க கூடும்.

தென்கிழக்கு திசைதான் மணி பிளாண்ட் நடுவதற்கு மிகவும் ஏற்ற திசையாகும். ஏனெனில், இந்ததென்மேற்கு திசை விநாயகரின் திசையாகக் கருதப்படுகிறது.

இந்த திசையில் மணி பிளாண்ட் வைப்பதால், வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்து இருக்கும். அதனால் வட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக வரும் எனவும் நம்பப்படுகின்றது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here