நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது புலி ஒன்று திடீரென குட்டியானையை பாய்ந்து கடித்தது இதில் பலத்த காயம் அடைந்த அந்த குட்டி அணை உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது இதனால் செய்வதறியாது கண்ணீருடன் தவித்த தாய் யானை அந்த வழியாக வந்த வாகனங்களை விரட்டியது…

இந்த தகவல் அறிந்து வந்த கர்நாடக வனத்துறையினர் குட்டி யானையை பார்வையிட்ட போது யானை உயிரிழந்தது தெரியவந்தது பின்னர் தாய் யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர் ஆனால் குட்டி யானையின் உடலை விட்டு செல்ல மறுத்த தாயான தும்பிக்கையால் குட்டியின் உடலை வருடி பாசப் போராட்டம் நடத்தியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முதுமலை பந்திப்பூர் சாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது
இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தாயானையை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டினர் மேலும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அனைத்தும் இயக்கப்பட்டன…
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here