நடிகை கயடு லோகர் கிளாமர் கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்து பிரபலமானவர். நடிகை ரம்பாவை போன்று நடிகை கயடு லோகரின் தொடை’யும் பெரிதாக பேசப்பட்டது. அதற்கும் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
கயடு லோகர் வளர்ந்த கதை :-
கடந்த் 2021ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முகில்பேடே’ திரைப்படத்தின் மூலம் கயடு லோகர் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிசியாக வலம் வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அதே ஆண்டில் ’அல்லூரி’, ‘ஐ ப்ரேம் யூ’ போன்ற திரைப்படங்களும் வெளியானது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை கயடு லோகர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த கயடு லோகர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

சிம்பு உடன் கயடு லோகர் :-
இந்த கயடு லோகர், “கலாட்டா மீடியா”வுக்கு (Galata Media) நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர், நடிகர் சிம்புவின் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் எஸ்.டி.ஆர்- 49, #STR 49 படத்தில் நடிக்கிறேன் என்றும், அது ரொம்ப மகிழ்ச்சியான விசயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கௌதம் வாசுதேவ் – சிம்பு கூட்டணியில் உருவான “விண்ணைத்தாண்டி வருவாயா..” படத்தைப் பார்த்ததும் நான் சிம்பு ரசிகையாக மாறிவிட்டேன் என்றும், அந்த படம் தான், நான் பார்த்த முதல் சிம்பு படம் என்றும் நடிகை கயடு லோகர் தெரிவித்தார்.

நான் மிஸ் செய்த சிம்பு படம் :-
“ஏற்கனவே நான் சிம்பு நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடிக்க வேண்டியது சில காரணங்களால் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது. தற்போது மீண்டும் சிம்பு உடன் நடிக்க வாய்பபு கிடைத்துள்ளது என்றும் நடிகை கயடு லோகர் ‘கலாட்டா மீடியா’ நேர்காணலில் கூறியிருந்தார்.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


