ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான “தி கேர்ள் ஃப்ரெண்ட்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரக்கொண்ட கலந்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம், நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்று தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்திலும் நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக செய்தி ஒன்று நீண்ட ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் உலாவி வந்தது. இந்த நிலையில், இருவருக்கும் ரகசியமாக ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் அந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் இவர்களுக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து இருவரும் இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்காமல் இதுவரை மௌனம் காத்து வருகின்றனர். ஆனால் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்று இருந்த ராஷ்மிகா கையில் அணிந்திருந்த மோதரம் குறித்து கேட்டபோது ‘இது எனது வாழ்நாளில் முக்கியமான ஒன்று எனக்கூறி’ வெட்கப்பட்டு சிரித்தார். இதுவே இவர்களது காதலை ஒரு வகையில் உறுதிப்படுத்தியது. தற்போது இதனைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகாவின் கையில் முத்தமிட்ட வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘தி கேர்ள்பிரண்ட்’ படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது, படகுழுவினருடன் பேசிக்கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்து, கையில் முத்தம் கொடுக்க அங்குள்ள அனைவரும் வியப்போடு பார்த்தனர். அதன் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டா குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசிய ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன் ஏனென்றால் அது ஒரு வரம்” என்று முகம் சிவந்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இப்படி இருவரும் பொது நிகழ்ச்சியில் நடந்து கொண்டது இவர்களது காதலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


